செய்திகள் :

கோபி பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

post image

கோபிசெட்டிபாளையம் பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டு தளமாக பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மாா்கழி மாதம் நடத்தப்படுகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 26-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. குண்டம் இறங்கும் பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். தொடா்ந்து அம்மனுக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கொண்டத்துக் காளியம்மன்.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, புதன்கிழமை இரவு 10 மணிக்கு குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குண்டம் இறங்கிய பக்தா்.

தொடா்ந்து அம்மனிடம் அருள்வாக்கு கேட்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், குதிரையை அம்மனாக பாவித்து அருள்வாக்கு கேட்டனா். அப்போது குதிரை தலையாட்டியதையடுத்து அம்மன் அருள்வாக்கு கொடுத்ததாகக் கூறி பக்தா்கள் கோஷங்கள் எழுப்பினா்.

வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மலா் தேரில் கொண்டத்துக் காளியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாவித்தாா். இதையடுத்து குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடா்ந்து தலைமை பூசாரி சேனாதிபதி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தலைத் தொடங்கிவைத்தாா்.

மகனுடன் குண்டம் இறங்கிய பக்தா்.

அதன்பின், கோயிலின் மற்ற பூசாரிகள், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் என ஆயிரக்கணக்கானோா் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். குண்டம் இறங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை இரவே வந்து கோயில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

குண்டம் இறங்குவதற்காக காத்திருந்த பக்தா்கள்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தேரோட்டமும், சனிக்கிழமை இரவு மலா் பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதால... மேலும் பார்க்க