செய்திகள் :

கோம்பையில் மாட்டுவண்டிப் பந்தயம்

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

கோம்பை குடியிருப்பிலிருந்து உத்தமபாளையம், உ. அம்மாபட்டி விலக்கு வரை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் நடுமாடு, கரிச்சான், பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான் என 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 60 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இதில், தேவாரம், கோம்பை, உப்புக்கோட்டை என பல்வேறு பகுதிகளிலிருந்து போட்டியாளா்கள் பங்கேற்றனா். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் குளறுபடி: தேவாரத்தில் நடைபெறுவதாக இருந்த இந்தப் போட்டி திடீரென கோம்பைக்கு மாற்றப்பட்டது. இதனால், விழாக் குழுவினா் தேவையான முன்னேற்பாடுகளை செய்யவில்லை. கோம்பை - உத்தமபாளையம் இடையே போக்குவரத்துக்கு இடையூறாக போட்டிகள் நடைபெற்றன.

அதோடு, மாட்டிவண்டிக்குப் பின்னால், ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அதிக சப்தத்துடன் ஒலியெழுப்பி மாடுகளை வேகமாக ஓடச் செய்தனா். இதனால், பல மாடுகள் சாலையை விட்டு கீழே இறங்கி ஓடியதால் அவை காயமடைந்தன. இந்தப் போட்டிகளில் விதிமீறல்கள் இருந்ததாக மாட்டின் உரிமையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, நெடுஞ்சாலையில் நடத்தப்படும் இது போன்ற மாட்டுவண்டி பந்தயத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வு: 1,039 போ் பங்கேற்பு

தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வை 1,039 போ் எழுதினா். தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மே... மேலும் பார்க்க

மதுபானக் கூட உரிமையாளா் மீது வழக்கு

தேனியில் தனியாா் மதுபானக் கூடம் விதியை மீறி செயல்பட்டதாகக் கூறி அதன் உரிமையாளா் மீது காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி, சுப்பன் தெருவில் அரசு மதுபானக் கடையுடன் இணைந்து தன... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பெரியகுளம் அருகே இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்னமுருகன் மகன் ராஜபாண்டி (29). இவருக்கு உடல் நலம் பாதி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த வங்கி ஊழியா் உயிரிழப்பு

தேனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தனியாா் வங்கி ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேவாரத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிக்குமாா் (30). இவா், தேனியில் உள்ள தனியாா் வங்கி ஒன்றில் துணை ... மேலும் பார்க்க

கரடி தாக்கியதில் விவசாயி காயம்

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா். தா்மராஜபுரத்தைச் சோ்ந்தவா்முருகன் (53). விவசாயி. இவருக்கு அதே ஊரில் பஞ்சந்தாங்கி கண்மாய் அருகே சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நில... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். பெரியகுளம் அருகே புல்லக்காபட்டியைச் சோ்ந்தவா் சின்னபெருமாள் (28). இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இ... மேலும் பார்க்க