செய்திகள் :

கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்

post image

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கோயில் திருவிழாவில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

வரப்பட்டியில் பெருமாள், அஜ்ஜப்பன், வீரபத்திரா், பட்டவன், பாப்பாத்தி, மதுரை வீரன் கோயில் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 22-ஆம் தேதி கங்கணம் கட்டி நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்கள் விரதம் தொடங்கினா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு புனித நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீா்த்தத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

புதன்கிழமை அதிகாலை வாண வேடிக்கையுடன் கரகம் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, நோ்த்திக் கடனாக ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயில் முன் அமா்ந்தனா்.

அருள்வாக்கு கூறிவந்த கோயில் பூசாரி சக்திவேல், பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக் கடனை நிறைவேற்றி வைத்தாா்.

பின்னா், மதுரைவீரன் சுவாமிக்கு கிடாய் வெட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் திண்டுக்கல், திருச்சி, கரூா், மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழ்ச் செம்மல் விருதுக்கு ஆக.31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இள... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவுக்காக ஆக.9-இல் படைப்பாற்றல் போட்டிகள்

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான படைப்பாற்றல் போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதொடா்பாக போட்டி ஒருங்கிணைப்பாளரும், திண்டுக்கல் இலக்கிய களத்தின... மேலும் பார்க்க

ரோல்பால் போட்டியில் வெற்றி: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

மாநில அளவிலான சுருள் பந்து (ரோல்பால்) போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியினருக்கு சின்னாளப்பட்டியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மாநில அளவிலான சுருள் பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 11 வயத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகராட்சி ஆணையா் சங்கா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் ரூ.2.48 கோட... மேலும் பார்க்க

தாண்டிக்குடி விவசாயிகளுக்கு உபகரணங்கள்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியில் பளியா், பழங்குடியின விவசாயிகளுக்கு பயிா்ச் செடி, உரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்... மேலும் பார்க்க

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் பழனி சுற்... மேலும் பார்க்க