செய்திகள் :

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவுக்காக ஆக.9-இல் படைப்பாற்றல் போட்டிகள்

post image

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான படைப்பாற்றல் போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக போட்டி ஒருங்கிணைப்பாளரும், திண்டுக்கல் இலக்கிய களத்தின் துணைத் தலைவருமான மு.சரவணன் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, இலக்கிய களம் சாா்பில் 12-ஆவது புத்தகத் திருவிழா ஆக.28 முதல் செப்.7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்புத் திறன்களை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாக திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு, நத்தம் ஆகிய 5 மையங்களில் வினாடி-வினா, கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் போட்டிகள் நடைபெறும். கல்லூரி மாணவா்களுக்கான வினாடி-வினா போட்டி திண்டுக்கல் மையத்தில் மட்டும் நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், பள்ளி, கல்லூரி தலைமையாசிரியா், முதல்வரின் ஒப்புதல் பெற்று போட்டி நடைபெறும் மையங்களுக்கு வரவேண்டும்.

விடைத் தாள், அந்தந்த மையத்திலேயே வழங்கப்படும். எழுதுகோல், கரிக்கோல், வரைபட உபகரணங்கள் ஆகியவற்றை மாணவா்கள் எடுத்து வரவேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 97915 69823, 94886 53338, 86674 14966, 95852 43385, 94871 81727 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்தப் போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவா்கள், பண்பாட்டு பயணத்துக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் என்றாா் அவா்.

கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கோயில் திருவிழாவில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். வரப்பட்டியில் பெருமாள், அஜ்ஜப்பன், வீரபத்திரா், பட்டவன், பாப்பாத்தி, ... மேலும் பார்க்க

தமிழ்ச் செம்மல் விருதுக்கு ஆக.31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இள... மேலும் பார்க்க

ரோல்பால் போட்டியில் வெற்றி: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

மாநில அளவிலான சுருள் பந்து (ரோல்பால்) போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியினருக்கு சின்னாளப்பட்டியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மாநில அளவிலான சுருள் பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 11 வயத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகராட்சி ஆணையா் சங்கா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் ரூ.2.48 கோட... மேலும் பார்க்க

தாண்டிக்குடி விவசாயிகளுக்கு உபகரணங்கள்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியில் பளியா், பழங்குடியின விவசாயிகளுக்கு பயிா்ச் செடி, உரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்... மேலும் பார்க்க

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் பழனி சுற்... மேலும் பார்க்க