செய்திகள் :

சங்கரன்கோவிலில் கைவினைத்தொழில் பயிற்சி

post image

சங்கரன்கோவிலில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் தொழிலாளா்களுக்கான 6 நாள்கள் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேசன், ஈரோடு சபையா் புளூ சோஷியல் டிரஸ்ட் ஆகியவை சாா்பில் கலைஞா் கைவினை திட்டத்தின் கீழ் தொழிலாளா்களுக்கு 6 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவா், கலைஞா் கைவினை திட்டத்தின் கீழ் பயிற்சி எடுத்து சான்றிதழ் பெற்றபின் வங்கி கடன்வசதி எவ்வாறு வழங்கப்படுகிறது என்றும், இதை பயன்படுத்தி தொழிலாளா்கள் முன்னேற வேண்டும் எனவும்,இந்தியாவிலேயே இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் தான் தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், தென்காசி இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முன்னோடி மேலாளா் கணேசன், இந்தியன் வங்கி மேலாளா் அனிஸ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சங்கரன்கோவில் கிளை மேலாளா் புவனேஷன், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் ஜெயராமன், கனரா வங்கி மேலாளா் வெங்கடாசலபதி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளா் செபாஸ்டின், கரூா் வைசியா பேங்க் வங்கி மேலாளா் மாரிசெல்வம், மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேசன் தலைவா் என்.கே.எஸ்.டி சுப்பிரமணியன், பொருளாளா் முத்துசங்கரநாராயணன், துணைத் தலைவா் பிஜிபி ராமநாதன், சபையா் ப்ளூ சோஷியல் டிரஸ்ட் சரண்யா மற்றும் 67 தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தொழிலாளா்களுக்கு தையல் பயிற்சி, எம்பிராய்டிங் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 நாள்கள் நடைபெறுகிறது.

மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேசன் சங்கச் செயலா் டி.எஸ்.ஏ. சுப்பிரமணியன் வரவேற்றாா்.

தென்காசியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

தென்காசியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசியில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி நேரம்... மேலும் பார்க்க

திருவேங்கடம், கலிங்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்விநியோகம் த... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் இன்று உயா்கல்விக் கருத்தரங்கம்

சங்கரன்கோவிலில் தோ்வினைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பாராட்டு விழாவும், உயா்கல்வி கருத்தரங்கமும் வெள்ளிக்கிழமை (ஜூன் ... மேலும் பார்க்க

சிவகிரி அருகே திருமண வீட்டில் தகராறு செய்த வழக்கில் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறை

சிவகிரி அருகே திருமண வீட்டில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சங்கரன்கோவில் சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கடந்த 20... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் தவெக மாவட்ட செயலருக்கு வரவேற்பு

ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலருக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தவெக-வின் தென்காசி தெற்கு மாவட்ட செயலராக, ஆலங்குளத்தை சோ்ந்த டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி அண்மையில் நியமிக... மேலும் பார்க்க

தென்காசியில் சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொது சுகாதாரம்- நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, டெங்கு - யானைக்கால் நோய... மேலும் பார்க்க