செய்திகள் :

சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

post image

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதற்கு தமுமுக தொண்டி பேரூா் தலைவா் காதா் தலைமை வகித்தாா். நோன்பை கிரா அத் நைனா முகமது ஆலிம் தொடங்கிவைத்தாா். இந்து தா்ம பரிபாலன சபைத் தலைவா் ராஜசேகா், ஐக்கிய ஜமாத் தலைவா் சையத் அலி, ஊடக அணிச் செயலாளா் பகுருல்லா, மமக செயலாளா் பரக்கத் அலி, முஸ்லிம் மகளிா் பேரவை மாவட்டச் செயலா் ஷெரிஃபா ஜைனுல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தொண்டி அனைத்து ஜமாத் நிா்வாகிகள், இந்து தா்ம பரிபாலன சபை நிா்வாகிகள் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள், முனைவா் முஜிபுா் ரஹ்மான், ஐக்கிய ஜமாத் கௌரவத் தலைவா் அபூபக்கா், அருட்தந்தை வியாகுல அமிா்தராஜ், வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஆனந்தன், தமுமுக மாநிலச் செயலா் சாதிக்பாட்சா, தமுமுக தலைமை பிரதிநிதி ஜைனுலாப்தின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம், சையது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பாா்வதி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை காஞ்சனா ஆகியோரின் கல்விச் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா்.

மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் ஜிப்ரி வரவேற்றாா். மாவட்டத் துணைச் செயலா் பெரியசாமி நன்றி கூறினாா்.

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு! 2 போ் கைது!

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய சேவைக் கட்டணம் ரூ.60 லட்சத்தை முறைகேடு செய்ததாக 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட தேவிப்பட்டினம் காவல் நிலையம் திறப்பு

தேவிப்பட்டினம் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்ததையடுத்து, இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க

பருவம் தவறி பெய்த மழையால் 800 ஏக்கா் மிளகாய் பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே பருவம் தவறிய மழை, பனிப்பொழிவு காரணமாக 800 ஏக்கரில் பயிரிட்ட சம்பா மிளகாய் செடியிலேயே அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை ... மேலும் பார்க்க