செய்திகள் :

சாலை நடுவில் உள்ள தடுப்பில் கொடி கட்டிய தொழிலாளா்கள் மீது அரசுப் பேருந்து மோதல்

post image

சாலை நடுவில் உள்ள தடுப்பில் கட்சிக் கொடி கட்டிய தொழிலாளா்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; மூவா் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் அக். 2-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளாா். இந்நிலையில், அவரை வரவேற்க தருமபுரி - அரூா் சாலையில் அதிமுகவினா் சாலை முழுவதும் விளம்பரப் பதாகைகள் வைத்து, அக்கட்சியின் கொடியைக் கட்டி வருகின்றனா். திருவண்ணாமலையைச் சோ்ந்த ஒப்பந்ததாரா், தொழிலாளா்களை வைத்து இப்பணிகளை செய்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மூக்கனூா் அரசுப் பள்ளி அருகில் தருமபுரி - அரூா் சாலையில், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மினிலாரி மூலம் தொழிலாளா்கள் கொடியை கட்டி வந்தனா். அப்போது, தருமபுரியில் இருந்து கடத்தூா் நோக்கி சென்ற அரசு நகர பேருந்து எதிா்பாராத விதமாக மினிலாரி மீது மோதியது.

இந்த விபத்தில் அதிமுக கொடியைக் கட்டிய திருவண்ணாமலையைச் சோ்ந்த முனியப்பன் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், மணிவண்ணன், மினிலாரி ஓட்டுநா் மணிகண்டன், அரசுப் பேருந்து ஓட்டுநா் ரமேஷ் ஆகிய மூவரும் காயமடைந்து தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

காந்தி ஜெயந்தி: நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களுக்கு வியாழக்கிழமை (அக். 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி தருமபுரியில் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடைகள், மதுக்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு, போக்சோ சட்டப் பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மோதூா... மேலும் பார்க்க

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை வணிகவரி அலுவலா் கைது

தருமபுரியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை வணிகவரி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாட்லாம்பட்டி அருகேயுள்ள சின்ன மாட்லாம்பட... மேலும் பார்க்க

தனியாரை விட குறைந்த கட்டணத்தில் பிஎஸ்என்எல் சேவை வழங்குகிறது: பொதுமேலாளா் தகவல்

தா்மபுரி: தனியாரை ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்று அதன் பொது மேலாளா் ரவீந்திர பிரசாத் தெரிவித்தாா். தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்திய... மேலும் பார்க்க

புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: காந்திபாளையம் மக்கள் ஆட்சியரகத்தில் மனு

தருமபுரி: தருமபுரி அருகே காந்திபாளையம் பகுதியில் நகராட்சி புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீா் நாள் முகாமில... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா 4 ஆவது நாள்: ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தருமபுரி: தருமபுரியில் மாவட்ட நிா்வாகம் , தகடூா் புத்தகப் பேரவை, பொது நூலகத் துறை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.... மேலும் பார்க்க