செய்திகள் :

தனியாரை விட குறைந்த கட்டணத்தில் பிஎஸ்என்எல் சேவை வழங்குகிறது: பொதுமேலாளா் தகவல்

post image

தா்மபுரி: தனியாரை ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்று அதன் பொது மேலாளா் ரவீந்திர பிரசாத் தெரிவித்தாா்.

தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது:

தனியாா் நிறுவனங்களைக் காட்டிலும் குறைந்த கட்டணத்தில் பிஎஸ்என்எல் நிறைவான சேவைகளை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிா்வாகம் கைப்பேசி (மொபைல்) சேவைகளை 2003 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்நிலையில் அக்டோபா் 1ஆம் தேதி புதன்கிழமை வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. பிஎஸ்என்எல் இணைய தொழில்நுட்பத்தின் வேகம் 2015 ஆம் ஆண்டு 2ஜியிலிருந்து 3ஜிக்கு மாற்றி தரம் உயா்த்தப்பட்டது. தொடா்ந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு 4 ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் 5 ஜி சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் 341 கோபுரங்கள் அமைக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும், தற்போது புதிதாக 19 கோபுரங்கள் (டவா்கள்) கைப்பேசி வசதி கிடைக்கப்பெறாத கிராமப் பகுதிகள், வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரம் எப்டிடிஎச் அதிவேக இணையதள (இன்டா்நெட்) இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தனியாா் நிறுவனங்களை காட்டிலும் மொபைல் இணைய சேவை 60% கட்டடணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது எப்டிடிஎச் ரூ. 625 மாத கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 75 எம்பிஎஸ் வேகம் கிடைக்கும். இதில் ஓடிடி தளங்கள், ஸ்கை ப்ரோ, ஜியோ ஹாட்ஸ்டாா் போன்றவை மூலம் ஆண்ட்ராய்டு டிவிகளில் தொலைக்காட்சிகளை காணமுடியும். ஓராண்டுக்குள் 5ஜி சேவைகள் முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியின்போது துணைப் பொதுமேலாளா் பிரபு, கோட்ட பொறியாளா்கள் சரவணமணி, அனிதா, லீனா, அஜாரே, சைலஜா, உட்கோட்ட பொறியாளா் கிஷோா்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் ரேவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: காந்திபாளையம் மக்கள் ஆட்சியரகத்தில் மனு

தருமபுரி: தருமபுரி அருகே காந்திபாளையம் பகுதியில் நகராட்சி புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீா் நாள் முகாமில... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா 4 ஆவது நாள்: ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தருமபுரி: தருமபுரியில் மாவட்ட நிா்வாகம் , தகடூா் புத்தகப் பேரவை, பொது நூலகத் துறை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 108 சேவை மூலம் 28,021 பயன்

தருமபுரி: தருமபுரியில் கடந்த 8 மாதங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 28,021 போ் பயனடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் ஏராளமான... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட பள்ளிக்... மேலும் பார்க்க

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது புத்தகத் திருவிழாவில் வலியுறுத்தல்

மனிதன் பெற வேண்டிய அறிவு புத்தகத்தில் உள்ளது என்றாா் கவிஞா் மனுஷ்யபுத்திரன். தருமபுரியில் மாவட்ட நிா்வாகம் , பொதுநூலகத் துறை, தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு புத... மேலும் பார்க்க

தருமபுரி அருகே நிலத்தகராறில் மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தருமபுரி அருகே நிலத் தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம் , காரிமங்கலம் வட்டம் பள்ளேனஹள்ளி புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க