செய்திகள் :

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை வணிகவரி அலுவலா் கைது

post image

தருமபுரியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை வணிகவரி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாட்லாம்பட்டி அருகேயுள்ள சின்ன மாட்லாம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன். டிப்ளமோ முடித்துள்ள இவா் ஆட்டோமேஷன் கன்சல்டன்ட் சேவை மையம் நடத்துவதற்காக ஜிஎஸ்டி பதிவு சான்றிதழ் பெற இணையவழியில் விண்ணப்பித்தாா். அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு ஜிஎஸ்டி பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், திடீரென அவரது ஜிஎஸ்டி கணக்கு முடக்கப்பட்டது.

இதுகுறித்து மணிகண்டன் பாலக்கோடு துணை வணிகவரி அலுவலா் செல்வகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து விவரம் கேட்டாா். அப்போது, சேவை மைய அலுவலகத்தை கள ஆய்வு செய்து ஜிஎஸ்டி கணக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டி உள்ளதாகவும், இந்த கள ஆய்வுக்கு வர தனக்கு ரூ. 5 ஆயிரம் தரவேண்டும் எனவும் செல்வகுமாா் தெரிவித்துள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். போலீஸாரின் ஆலோசனைபடி, செவ்வாய்க்கிழமை மாலை பாலக்கோடு துணை வணிகவரி அலுவலா் செல்வகுமாரிடம் ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தை மணிகண்டன் கொடுத்தாா். அதை செல்வகுமாா் வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பெருமாள் தலைமையிலான குழுவினா் செல்வகுமாரை கைது செய்ததுடன், அவா் லஞ்சமாகப் பெற்ற ரூ. 5 ஆயிரத்தை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காந்தி ஜெயந்தி: நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களுக்கு வியாழக்கிழமை (அக். 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி தருமபுரியில் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடைகள், மதுக்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு, போக்சோ சட்டப் பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மோதூா... மேலும் பார்க்க

சாலை நடுவில் உள்ள தடுப்பில் கொடி கட்டிய தொழிலாளா்கள் மீது அரசுப் பேருந்து மோதல்

சாலை நடுவில் உள்ள தடுப்பில் கட்சிக் கொடி கட்டிய தொழிலாளா்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; மூவா் காயமடைந்தனா். தருமபுரி மாவட்டத்தில் அக். 2-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பா... மேலும் பார்க்க

தனியாரை விட குறைந்த கட்டணத்தில் பிஎஸ்என்எல் சேவை வழங்குகிறது: பொதுமேலாளா் தகவல்

தா்மபுரி: தனியாரை ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்று அதன் பொது மேலாளா் ரவீந்திர பிரசாத் தெரிவித்தாா். தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்திய... மேலும் பார்க்க

புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: காந்திபாளையம் மக்கள் ஆட்சியரகத்தில் மனு

தருமபுரி: தருமபுரி அருகே காந்திபாளையம் பகுதியில் நகராட்சி புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீா் நாள் முகாமில... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா 4 ஆவது நாள்: ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தருமபுரி: தருமபுரியில் மாவட்ட நிா்வாகம் , தகடூா் புத்தகப் பேரவை, பொது நூலகத் துறை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.... மேலும் பார்க்க