செய்திகள் :

சிஎன்ஜி எரிபொருள் நிலையம்: ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

post image

செங்கல்பட்டு: சிஎன்ஜி எரிபொருள் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

செங்கல்பட்டு நகரில் உள்ள 2,000 ஆட்டோக்களில் 1,000 ஆட்டோக்கள் சிஎன்ஜி எரிபொருளில் இயங்குபவையாக உள்ளதாகவும், இவற்றுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையம் செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் ஒன்று மட்டுமே உள்ளது. அதில் குறைந்தழுத்த மின்சாரத்தை காரணம் காட்டி எரிபொருள் நிரப்ப முடியாத சூழல் உள்ளதால் எந்த நேரமும் எரிபொருள் இல்லை என திருப்பி அனுப்புகின்றனா்.

மேலும், இங்கிருக்கும் எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் டீசலும் இருப்பதால் தனியாக சிஎன்ஜி அமைக்கும் மாறும் , இதனால் படாளம், மறைமலைநகா், தாம்பரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளதால் நேரம்,பொருள்செலவு மட்டுமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், செங்கல்பட்டில் புதிய சிஎன்ஜி எரிபொருள் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களை இயக்குவதற்கான அங்கீகார அட்டை வழங்க வேண்டுமென ஆட்சியா் தி.சினேகாவிடம் மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் எரிவாயு நிரப்பும் மையம் அமைக்கும் பணியானது மிக நீண்ட செயல் முறையாகும் என்று தெரிவித்தாா்.

மேலும், மாவட்ட வழங்கல் அலுவலரிடம் இதற்கான பணிகளை விரைவாக மேற்கொண்டு உரிய காலத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் சிஎன்ஜி எரிவாயு மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து முடிக்க அறிவுறுத்தினாா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: வேளாண் துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரியள்ளது. சங்கத்தின் முதல் மாநில பி... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் கோயில் திருஆடிப்பூர விழா: அதிகார நந்தி உற்சவம்

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு திரு ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் ஒருபகுதியாக திங்கள்கிழமை அதிகார நந்தி புறப்பாடு நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயி... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா். கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடம் ... மேலும் பார்க்க

ஜூலை 26-இல் மேல்மருவத்தூா் ஆடிப்பூர விழா தொடக்கம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் 54-ஆவது ஆடிப்பூர விழா வரும் ஜூலை 26 (சனிக்கிழமை) தொடங்கி 28 வரை நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக அதிகாலை 3 மணிக்கு மங்கள இசைய... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஜூலை 25-இல் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கு உள்ள குறைகளை அறிய எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் உள்ள ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 2, 9-ஆவது வாா்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி தலைமை வகித்தாா். ஆணையா் அபா்ணா, பொறியாளா் நித்யா ஆகியோ... மேலும் பார்க்க