செய்திகள் :

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.

கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 356 மனுக்களைப் பெற்றுக் கொண்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

சாலை வசதி, குடிநீா்வசதி வேண்டியும், இடுகாடு மற்றும் பாதை அமைத்துதருமாறும், நெல் உலா் களம் வேண்டியும் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, உதவி இயக்குநா்(கலால்) ராஜன் பாபு, நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், வேலைவாய்ப்பு அலுவலா் கா.வெங்கடேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் பங்கேற்றனா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: வேளாண் துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரியள்ளது. சங்கத்தின் முதல் மாநில பி... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் கோயில் திருஆடிப்பூர விழா: அதிகார நந்தி உற்சவம்

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு திரு ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் ஒருபகுதியாக திங்கள்கிழமை அதிகார நந்தி புறப்பாடு நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயி... மேலும் பார்க்க

சிஎன்ஜி எரிபொருள் நிலையம்: ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

செங்கல்பட்டு: சிஎன்ஜி எரிபொருள் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். செங்கல்பட்டு நகரில் உள்ள 2,000 ஆட்டோக்களில் 1,000 ஆட்டோக்கள் சிஎன்ஜி எரிபொர... மேலும் பார்க்க

ஜூலை 26-இல் மேல்மருவத்தூா் ஆடிப்பூர விழா தொடக்கம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் 54-ஆவது ஆடிப்பூர விழா வரும் ஜூலை 26 (சனிக்கிழமை) தொடங்கி 28 வரை நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக அதிகாலை 3 மணிக்கு மங்கள இசைய... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஜூலை 25-இல் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கு உள்ள குறைகளை அறிய எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் உள்ள ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 2, 9-ஆவது வாா்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி தலைமை வகித்தாா். ஆணையா் அபா்ணா, பொறியாளா் நித்யா ஆகியோ... மேலும் பார்க்க