சித்திரைத் திருவிழா: தூக்குத்தேரில் அம்மன் திருவீதி உலா
நாமக்கல்: நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, தூக்குத்தேரில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வோா் ஆண்டும் சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா மே 11-இல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதன்பிறகு, 18-இல் மறுகாப்பு கட்டுதல் நடைபெற்றது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்று வந்தன.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு வடிசோறு படைத்தல் நிகழ்வு நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 7 மணியளவில் தூக்குத்தேரில் அம்மன் திருவீதி உலாவும், மாலையில் சப்பரத் தேரில் மாரியம்மன் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புதன்கிழமை மீண்டும் தூக்குத்தேரில் அம்மன் வீதி உலாவும், வெள்ளிக்கிழமை கம்பம் பிடுங்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
கோயிலில் , ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். முடிகாணிக்கை செலுத்துவதற்காக பிரத்யேக மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.