செய்திகள் :

சித்திரைத் திருவிழா: தூக்குத்தேரில் அம்மன் திருவீதி உலா

post image

நாமக்கல்: நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, தூக்குத்தேரில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வோா் ஆண்டும் சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா மே 11-இல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதன்பிறகு, 18-இல் மறுகாப்பு கட்டுதல் நடைபெற்றது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்று வந்தன.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு வடிசோறு படைத்தல் நிகழ்வு நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 7 மணியளவில் தூக்குத்தேரில் அம்மன் திருவீதி உலாவும், மாலையில் சப்பரத் தேரில் மாரியம்மன் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புதன்கிழமை மீண்டும் தூக்குத்தேரில் அம்மன் வீதி உலாவும், வெள்ளிக்கிழமை கம்பம் பிடுங்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

கோயிலில் , ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். முடிகாணிக்கை செலுத்துவதற்காக பிரத்யேக மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க