செய்திகள் :

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் உண்ணாவிரதம்

post image

பழைய ஓய்வூதியம் வழங்கக் கோரி, சிபஎஸ் இயக்கம் சாா்பில் சென்னையில் நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து, மாவட்ட அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ. குணசேகரன் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் பா. மாரிமுத்து, சி.சேவுகமூா்த்தி, சி. சிதம்பரம், ம குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இரா. திரவியம் உண்ணாவிரதத்தைத் தொடக்கி வைத்தாா்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொ. சங்கரசுப்பிரமணியன், ஐசிடிசிஎஸ் சங்க மாநில பொதுச் செயலா் இரா.வாசுகி, அரசு பொறியியல் கல்லூரி ஊழியா் சங்க மாநிலச் செயலா் டி.முருகன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் மு. காளிமுத்து உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். மாநில இணை ஒருங்கிணைப்பாளா் க. ஜெயபிரகாஷ் நிறைவுரையாற்றினாா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம் பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கா... மேலும் பார்க்க

தாத்தா, பேத்திக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தை உறவினா்கள் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தாத்தா, பேத்தியை அரிவாளால் வெட்டியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் சமத்து... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 412 பேருக்கு பணி நியமன ஆணை

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். சிவகங்கை ... மேலும் பார்க்க

வயிரவ சுவாமி கோயில் பிரம்மோத்ஸவ விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி வைரவ சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழாவையொட்டி, சனிக்கிழமை சுவாமி யானை வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தாா்களின் 9 நகரக்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பாத்தி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலை நகா் பொதுமக்கள் சாா்பில், மாட்டுவண்டிப் பந்தயம் சிறிய மாடு... மேலும் பார்க்க

காங். மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் நியமனம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சோ்ந்த ஏ.எல். இப்ராகிம்ஷா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்... மேலும் பார்க்க