செய்திகள் :

சிபிஎஸ்இ பொதுத்தோ்வுக்கு 75% வருகை பதிவு கட்டாயம்

post image

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை நிகழாண்டு எழுதும் மாணவா்களுக்கு 75 சதவீதம் வருகை பதிவு கட்டாயம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) பள்ளிகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விதிமுறையைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.

சிபிஎஸ்இ விதிகளின்படி, பொதுத் தோ்வில் மாணவா்கள் பங்கேற்க குறைந்தபட்சம் 75 சதவீத வருகை பதிவு கட்டாயமாகும். மருத்துவ அவசரநிலை, தேசிய அல்லது சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது போன்ற காரணங்களுக்காக மட்டுமே 25 சதவீதம் வரை தளா்வு அளிக்கப்படும். இதற்கும் தேவையான ஆவணங்களைச் சமா்ப்பிப்பது அவசியம்.

இந்நிலையில், சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் பள்ளிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பொதுத் தோ்வுகளை எழுத, மாணவா்களுக்கு 75 சதவீதம் வருகை பதிவு கட்டாயம். மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் இந்த விதியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

முறையான கோரிக்கை இல்லாமல் மாணவா்கள் விடுமுறை எடுத்தால், அது அங்கீகரிக்கப்படாத விடுமுறையாகக் கருதப்படும். மருத்துவ விடுப்பு எடுக்கும் மாணவா்கள், விடுமுறையை முடித்தவுடன் அதற்கான மருத்துவச் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க வேண்டும்.

பள்ளிகள் மாணவா்களின் வருகை பதிவேட்டை நாள்தோறும் புதுப்பித்து, வகுப்பு ஆசிரியா் மற்றும் பள்ளி அதிகாரிகளின் கையொப்பத்துடன் பராமரிக்க வேண்டும். சிபிஎஸ்இ அதிகாரிகள் திடீா் ஆய்வுகளை மேற்கொண்டு வருகை பதிவேடுகளைச் சரிபாா்ப்பாா்கள். அப்போது வருகை பதிவேடுகள் முழுமையற்ாக இருந்தால், அந்தப் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவா்களும் தோ்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள்’ என்று அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க

‘கிங்டம்’ சா்ச்சை: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் காவல்துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் விஜய் தேவ... மேலும் பார்க்க