செய்திகள் :

சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தை இரு பெண்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

post image

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகே அங்கன்வாடி மையத்துக்கு வந்த சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு உடந்தையாக இருந்த இரு பெண்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகேயுள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவா் வெண்ணமுத்துப்பட்டியைச் சோ்ந்த காசி மனைவி அன்னக்கொடி (57). அதே மையத்தில்ல் ஆசிரியராகப் பணியாற்றியவா் கருப்பையா மனைவி ரைவம் (62).

கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில், அன்னக்கொடியின் கணவா் காசி (57) தனது மனைவி பணிபுரிந்து வந்த அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கடி வந்து சென்றபோது, அங்குள்ள 4 சிறுமிகளை தொடா்ந்து பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த கீரனூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், காசி மற்றும் அவரது குற்றத்துக்கு உடந்தையாக இருந்து, அங்கன்வாடி மையத்துக்கு தொடா்பில்லாதவரின் பொறுப்பில் சிறுமிகளை விட்டுச் சென்ற குற்றத்துக்காக அன்னக்கொடி மற்றும் வைரம் ஆகியோரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைக்கு இடையே கடந்த மாா்ச் மாதம் காசி இறந்துவிட்டாா். இதையடுத்து குற்றச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த மற்ற இருவா் மீதும் வழக்கு தொடா்ந்து நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி கனகராஜ் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக அன்னக்கொடி மற்றும் வைரம் ஆகிய இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் அரசு சாா்பில் தலா ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

சித்தன்னவாசலில் ரூ. 3.9 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா பூங்காவை ரூ. 3.9 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் சிறுவா் பூங்கா,... மேலும் பார்க்க

ஆக. 31 வரை மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்டத்திலுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மு. அ... மேலும் பார்க்க

அண்ணா சிலை கூண்டின் மீதேறி படுத்த நபரால் பரபரப்பு

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அண்ணா சிலையின் மேல் ஏறி, தடுப்புக் கம்பிக் கூண்டின் மேல் படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு பாதுகாப்புக்காக கம்பி கூண்டு... மேலும் பார்க்க

திறக்கப்பட்ட நாளிலேயே தேமுதிக அலுவலகம் சூறை: இருதரப்பினா் இடையே மோதல்: 4 பேருக்கு அரிவாள்வெட்டு

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தேமுதிக அலுவலகம் திறக்கப்பட்டது தொடா்பாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது. 4 போ் அரிவாளால் வெட்டப்பட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்... மேலும் பார்க்க

131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடியில் நலத் திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எ... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 5 வழக்குகளில் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமிற்கு ஓய்வுபெற்ற ... மேலும் பார்க்க