Phoenix: "ரொம்ப வீக்கா ஃபீல் பண்ணினேன்..." - மனம் திறந்த சூர்யா சேதுபதி!
சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி கைது
அவிநாசியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிச்சித்தூா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகன் வெங்கடேஷ் (33). கட்டடத் தொழிலாளியான இவா், அவிநாசி சிந்தாமணி திரையரங்கு பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வருகிறாா்.
இவா் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்ததாக சிறுமியின் பெற்றோா் அவிநாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வெங்கடேஷை கைது செய்தனா்.