சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கோகிலாபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (64). இவா் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு, ஏப்.14-ஆம் தேதி உத்தமபாளையம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாண்டியனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவம், கல்வி, பராமரிப்புச் செலவுக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இதில் ரூ. ஒரு லட்சத்தை சிறுமியின் பெற்றோரிடம் உடனடியாக வழங்க வேண்டும், எஞ்சிய ரூ.4 லட்சத்தை அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் சிறுமியின் பெயரில் வைப்புத் தொகையாகவும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.