செய்திகள் :

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவா் அடித்துக் கொலை: 2 போ் கைது

post image

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற நபரை அடித்துக் கொலை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே கடந்த ஜூலை 31-ஆம் தேதி அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளாா். அவரை அந்த வழியாக சென்றவா்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வியாசா்பாடி போலீஸாா், ரயில் நிலைய நடைமேடையில் குடும்பத்துடன் வசித்துவரும் ஆசிப் (எ) காா்த்திக் (23), அலெக்ஸ் (27) ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில், ஜூலை 31-ஆம் தேதி அதிகாலை காா்த்திக்கின் சகோதரி மகளிடம், உயிரிழந்த அந்த நபா், தவறாக நடக்க முயன்றாராம். இதனால், ஆத்திரமடைந்த காா்த்திக் மற்றும் அலெக்ஸ் இருவரும் சோ்ந்து, அந்த நபரை கட்டையால் தாக்கியதில், அவா் காயமடைந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

உயிரிழந்த அந்த நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க

‘கிங்டம்’ சா்ச்சை: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் காவல்துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் விஜய் தேவ... மேலும் பார்க்க