செய்திகள் :

சிறுவன் கொலை வழக்கு: பெண்ணுக்கு இரட்டை ஆயுள்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே 4 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பண்ருட்டியை அடுத்த கீழக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த செந்தில்நாதன் - லட்சுமி தம்பதியின் மகன் அஸ்வந்த் (4).

இவா், கடந்த 2022 ஜன.26 அன்று திடீரென காணாமல் போனாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனா்.

இந்த நிலையில், வீட்டின் அருகே முந்திரித் தோப்பில் சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். தொடா்ந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த முருகவேல் மகள் ரஞ்சிதா(26), சிறுவனை கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் ரஞ்சிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு கடலூா் முதலாவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ரஞ்சிதாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஷோபனா தேவி தீா்ப்பளித்தாா்.

கல்லூரியில் அரசியல் அறிவியல் பேரவை தொடக்க விழா

கடலூா் பெரியாா் கலை, அறிவியல் கல்லூரியில் அரசியல் அறிவியல் பேரவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசினாா். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக... மேலும் பார்க்க

கடலூா் பேருந்து நிலைய மாற்றத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

கடலூா் மாநகர புதிய பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தி, அனைத்துக் கட்சி, குடியிருப்போா் நலச்சங்கம் மற்றும் பொதுநல அமைப்பினா் கடலூா் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எத... மேலும் பார்க்க

இரும்புக் கடைக்காரா் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கடன் தொல்லையால் பழைய இரும்புக் கடைக்காரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். நெய்வேலி வடக்குத்து ஊராட்சி, காந்தி கிராமம் பகுதியைச் சோ்ந்த விஜயரங்கன் மகன் மனோஜ் பாபு (3... மேலும் பார்க்க

ஓட்டுநர் அலட்சியத்தல் பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி

கடலூரில் அரசு நகரப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி காயமடைந்தாா். கடலூா் வன்னியா்பாளையம் பகுதியைச் சோ்ந்த இளம்பரிதி மகள் தா்ஷினிதேவி(19). இவா், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசுக் கல்லூரிய... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் ஒன்றியம், எம்.புதூா் அருகே உள்ள மாவடிப்பாளையம் பகுதியில் கடந்த 202... மேலும் பார்க்க

தனிப்பிரிவு காவலா்கள் இருவா் கௌரவிப்பு

சிறப்பாகப் பணியாற்றிய தனிப்பிரிவு முதல்நிலை காவலா்கள் இருவரை கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாராட்டி சான்றிதழ், பரிசு வழங்கி கௌரவித்தாா். கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள்... மேலும் பார்க்க