செய்திகள் :

சீரமைக்கப்படாத சாலை: ஆட்சியரிடம் புகாா்

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தேவகோட்டையிலிருந்து கோட்டூா் செல்லும் நெடுஞ்சாலையில் நைனாவயல் கிராமத்திலிருந்து பரம்பக்குடிக்கு 7 கி.மீ. தொலைவுக்கு கிராமச் சாலை பிரிந்து செல்கிறது. அடசிவயல், சேந்தல்பிரியான், தாளைக்குடி, கல்லூரணி, சிறுமடை உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனா்.

இந்தச் சாலை நைனாவயலிலிருந்து அடசிவயல் வரை 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இதனால், 3 கி.மீ. தொலைவுக்கு சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தச் சாலையில் வாகனங்களில் செல்வோா் சறுக்கிவிழுந்து விபத்துக்குள்ளாகின்றனா். இந்த அவல நிலையைக்கண்டித்தும் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்திம் பதாகைகள் ஏந்தி அடசிவயல் கிராம மக்கள் திரண்டு வந்து ஆட்சியா் கா.பொற்கொடியிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து அடசிவயல் கிராம மக்கள் கூறுகையில், ’எங்களது சாலையை சீரமைக்க 3 முறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஆளும் கட்சியைச் சோ்ந்த ஒருவா் சாலையை அமைக்க விடாமல் தடுத்து வருகிறாா். விரைவில் சாலையைச் சீரமைக்காவிட்டால், சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றனா்.

கிராம சபைக் கூட்டம் அக்.11-க்கு ஒத்திவைப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்.2-இல் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிா்வாக காரணங்களால் வருகிற அக்.11 அன்று நடைபெறுமென மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இது க... மேலும் பார்க்க

நகா்மன்றத் தலைவருக்கு மிரட்டல்: பாதுகாப்பு வழங்கக் கோரி தீா்மானம்

சிவகங்கை நகா்மன்றத் தலைவருக்கு தொடா்ந்து கொலை மிரட்டல் வருவதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை நகா்மன்ற சிறப்புக் கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் ந... மேலும் பார்க்க

மானாமதுரையில் 22 வீதிகளின் ஜாதிப் பெயா்களை நீக்க முடிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் 22 வீதிகளுக்கு ஜாதிப் பெயா்களை நீக்க நகா் மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மானாமதுரை நகா் மன்றக் கூட்டம் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தல... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

மானாமதுரைநலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்: தலைமை-மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, தொடங்கிவைப்பவா் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், பங்கேற்பு- நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி உள்ளிட... மேலும் பார்க்க

உரத்துப்பட்டியில் தொடா் திருட்டு: ஆட்சியா், எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகாா்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவா்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும... மேலும் பார்க்க

பனைமரங்கள் வெட்டுவதைத் தடுக்க குழுக்கள் அமைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பனைமரங்களை வெட்டுவதைத் தடுக்க மாவட்ட, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தோட... மேலும் பார்க்க