செய்திகள் :

சுதந்திர தின சிறப்பு மலை ரயில்

post image

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை சீசனை முன்னிட்டு கடந்த மாா்ச் 28 -ஆம் தேதி முதல் ஜூலை 7 -ஆம் தேதி வரை வார இறுதி நாள்களில் கூடுதல் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்கு சுற்றுலாப் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு மலை ரயில்கள் வரும் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு மலை ரயில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு உதகை வந்து சேரும். அதேபோல மாலை 4.45 மணிக்கு உதகையிலிருந்து புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு குன்னூா் வந்து சேரும்.

இதை தவிர, இந்த மூன்று தினங்கள் உதகையிலிருந்து கேத்தி வரை ஜாலி ரைட் ரயிலும் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே அலுவலா் ஜி.மரிய மைக்கேல் தெரிவித்துள்ளாா்.

உதகையில் கன மழை!

உதகை பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் கனமழை பெய்தது. கனமழையால் கோடப்ப மந்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ரயில்வே இரும்பு பாலம் பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கியது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

புலி தாக்கி எருமை உயிரிழப்பு

உதகை அருகே தாவரவியல் பூங்கா மூலக்கடை அருகே செவ்வாய்க்கிழமை புலி தாக்கியதில் எருமை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அரசு தலைமை கொறடா ஆய்வு

உதகை அருகே தொட்டபெட்டா ஊராட்சிக்கு உள்பட்ட முத்தோரை சமுதாய கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் நேரில் ஆய்வு செய்தாா். தொட்டபெட்டா ஊராட்... மேலும் பார்க்க

செஸ் போட்டி: புனித அந்தோணியாா் பள்ளி சாம்பியன்

மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் கூடலூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நீலகிரி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி உதகையில் அண்மையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

உதகையில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் ஒருவா் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம், உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தற்போத... மேலும் பார்க்க

ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றது.நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்... மேலும் பார்க்க