செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அரசு தலைமை கொறடா ஆய்வு

post image

உதகை அருகே தொட்டபெட்டா ஊராட்சிக்கு உள்பட்ட முத்தோரை சமுதாய கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் நேரில் ஆய்வு செய்தாா்.

தொட்டபெட்டா ஊராட்சியில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முறையாக பெற்றுக்கொள்ளவும், அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்து தரப்படவும், மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்படுகிறதா என்பதையும் உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு கா.ராமசந்திரன் உத்தரவிட்டாா். கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின்வசதி வேண்டி விண்ணப்பித்த 3 நபா்களுக்கு உடனடியாக தீா்வு காணும் வகையில் அதற்கான தடையில்லா சான்றிதழ்களை வழங்கினாா்.

இதேபோல உதகை நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்ட நிலையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையா் நமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழை முன்னேற்பாட்டுப்

பணிகள் தொடா்பாக காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தினாா். அதைத் தொடா்ந்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தலைமையில் ஆய்வு கூட்டம் பெற்றது. இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கள ஆய்வில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

உதகையில் கன மழை!

உதகை பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் கனமழை பெய்தது. கனமழையால் கோடப்ப மந்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ரயில்வே இரும்பு பாலம் பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கியது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

புலி தாக்கி எருமை உயிரிழப்பு

உதகை அருகே தாவரவியல் பூங்கா மூலக்கடை அருகே செவ்வாய்க்கிழமை புலி தாக்கியதில் எருமை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின்... மேலும் பார்க்க

செஸ் போட்டி: புனித அந்தோணியாா் பள்ளி சாம்பியன்

மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் கூடலூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நீலகிரி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி உதகையில் அண்மையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

சுதந்திர தின சிறப்பு மலை ரயில்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

உதகையில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் ஒருவா் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம், உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தற்போத... மேலும் பார்க்க

ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றது.நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்... மேலும் பார்க்க