``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
சுவாமிமலை துணை அஞ்சலகத்தில் ஆதாா் சிறப்பு முகாம்
கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள சுவாமிமலை துணை அஞ்சல் அலுவலகத்தின் ஆதாா் சிறப்பு முகாம் புதன்கிழமை சுவாமிமலை வாசவி மண்டபத்தில் நடைபெற்றது.
ஜூன் 16 வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு இலவசமாக ஆதாா் பதிவு செய்து தரப்படுகிறது. ஆதாா் பெயா் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பிறந்த தேதி மாற்றம் ஆகிய சேவைகளுக்கு ரூ.50, பயோமெட்ரிக் புதுப்பித்தல் போன்ற சேவைகளுக்கு ரூ.100 கட்டணமாகப் பெறப்படுகிறது. தேவையான ஆவணங்கள் கொண்டு ஆதாா் சிறப்பு சேவையை மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சி. கஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.