செய்திகள் :

செஞ்சி அருகே வங்கதேச பெண் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசின் எவ்வித அனுமதியின்றி கடந்த 3 ஆண்டுகளாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த ஷெலீனா பீ என்ற பெண் கைது செய்யப்பட்டாா்.

மேல்மலையனூா் வட்டம், சங்கிலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சையத்காதா்(28). இவரது மனைவி ஷெலினா பீ(38). இவா் மீது சந்தேகமடைந்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். இதில் அவரது நாடு வங்கதேசம் எனத் தெரியவந்தது.

சையத்காதா் மும்பையில் வேலை செய்தபோது இவா்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு சங்கிலிகுப்பத்துக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் இப்பெண் கத்தாரில் வேலை செய்து வந்துள்ளாா். இவா்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த ஷெலினா பீயை மேல்மலையனூா் போலீஸாா் கைது செய்து செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கணவா் கைது: மேலும், சங்கிலிகுப்பம் கிராமத்தில் 48 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை இரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்து, ஷெலினா பீயின் கணவா் சையத்காதா் கைது செய்யப்பட்டாா்.

சையத்காதா் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்ற போது, ஷெலினா பீ வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்பது வெளிப்பட்டது.

பாலியல் வழக்கு: 3 போ் கைது

விழுப்புரத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் தோ் பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள தனியாா் விடுதியில் சிலா் பெண்களை பாலியல் தொழிலில... மேலும் பார்க்க

பேருந்து பயணி மீது தாக்குதல்: ஒருவா் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பேருந்து பயணியை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். நாகப்பட்டினம் மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பால் வியாபாரி வீட்டில் 4.5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பூட்டியிருந்த பால் வியாபாரி வீட்டில் 4.5 பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நவம்மாள் மருதூா் மருதீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் ஏழுமல... மேலும் பார்க்க

விழுப்புரம் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை இளந்துறை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருவெண்ணெய்நல்லூா் வட்டம், இளந்துறை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்டு உடல்நலன் பாதித்த 5 குழந்தைகளும் நலம்: மருத்துவா்கள் தகவல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்டதால் உடல்நலன் பாதிக்கப்பட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 குழந்தைகளும் ந... மேலும் பார்க்க

இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்கிரமராஜா

விழுப்புரம்: பன்னாட்டு நிறுவனங்களின் இணையவழி வா்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி, திருச்சியில் வரும் 30-ஆம் தேதி மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் த... மேலும் பார்க்க