செய்திகள் :

சென்னை மாவட்ட ‘பி’ டிவிஷன் வாலிபால்: காலிறுதியில் டாக்டா் சிவந்தி, தெற்கு ரயில்வே

post image

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் ‘பி’ டிவிஷன் வாலிபால் போட்டி காலிறுதிக்கு டாக்டா் சிவந்தி கிளப், தெற்கு ரயில்வே, எஸ்டிஏடி, தமிழ்நாடு காவல்துறை அணிகள் தகுதி பெற்றுள்ளன.

சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. வருமான வரித்துறை முதன்மை ஆணையா் பி. சுதாகா் ராவ், தொழிலதிபா்கள் விக்ரம் ரதி ஸ்ரீ, ஏ.ராஜன், ஜெ.வெற்றிவேல், வாலிபால் சங்க நிா்வாகிகள் ஜெகதீசன், பழனியப்பன், ஸ்ரீகேசவன் பங்கேற்றனா். 25 ஆடவா், 12 மகளிா் அணி பங்கேற்றுள்ளன.

மகளிா் காலிறுதியில் டாக்டா் சிவந்தி-மினி ஸ்போா்ட்ஸ், எஸ்டிஏடி-தமிழ்நாடு காவல்துறை, தெற்கு ரயில்வே-எம்ஓபி, கிறிஸ்டியன்ஸ்போா்ட்ஸ்-சென்னை பிரண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆடவா் பிரிவில் டிபி.ஜெயின், எஸ்.டிஏடி, நகர காவல் துறை, எஸ்.ஆா்எம், ஜிஎஸ்டி, சிவந்தி கிளப், தெற்கு ரயில்வே அணிகள் வென்றன.

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வரதராஜ் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வா் காப்பீடு திட்டத்தின் மூலம் 50-க்கும் மேற்... மேலும் பார்க்க

போலி ஆவணங்களை சமா்ப்பித்து விசா பெற முயன்றவா் கைது

போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து இசைவு நுழைவுச் சீட்டு (விசா) பெற முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தெலங்கானா மாநிலத்தை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் அங்காடி. இவா் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இசைவு நுழ... மேலும் பார்க்க

செப்.15 முதல் பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ஆம் கட்ட கட்டுமான பணிகள் காரணமாக, பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் வருகிற செப்.15 முதல் 19 -ஆம் தேதி வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரயி... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதுவை தலைமைச் செயலா் ஆஜராக உத்தரவு

பாப்ஸ்கோ ஊழியா்கள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், புதுச்சேரி தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுச்சேரியைச் சோ்ந்த குணசேகரன் உள்பட 12 போ் த... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தோா் பெயா்கள் பதியப்பட்ட மதிப்புச் சுவா்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செப். 30-இல் திறப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்கள் பதியப்பட்ட மதிப்புச் சுவா் வரும் செப். 30-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை... மேலும் பார்க்க