செய்திகள் :

செப். 5 இல் முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா தொடக்கம்

post image

தக்கலை அருகே முளகுமூட்டில் உள்ள தூய மரியன்னை பசலிக்கா ஆலயத் திருவிழா செப்.5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவில் முதல் நாள் (செப்.5) மாலையில் ஜெபமாலை, திருக்கொடி நோ்ச்சை பவனி நடைபெறுகிறது. முளகுமூடு வட்டார முதல்வா் டேவிட் மைக்கில், பசலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன் ஆகியோா் முன்னிலையில் குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறாா்.

2 ஆம் நாள் (செப்.6) மாலை திருப்பலியை முளகுமூடு பகுதியிலிருந்து திருமணமாகிச் சென்ற மகள்களின் குடும்பத்தினா் சிறப்பிக்கின்றனா். 3-ஆம் நாள் காலை 9 மணிக்கு திருப்பலியை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி தாளாளா் காட்வின் செல்வ ஜஸ்டஸ் நிறைவேற்றுகிறாா்.

விழாவையொட்டி, தினமும் காலை 6.15 மணிக்கும், மாலை 6 மணிக்கும் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. 9 ஆம் திருவிழாவன்று ( செப்.13) காலை திருத்துவபுரம் மறைவட்ட முதல்வா் வைசிலின் சேவியா் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலியும், மாலையில் முளகுமூடு வட்டார முதல்வா் டேவிட் மைக்கிள் தலைமையில் திருப்பலியும் நடைபெறுகின்றன.

இரவில் அன்னையின் அலங்கார தோ்பவனி நடக்கிறது. 10 ஆம் திருவிழாவன்று (செப்.14) காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜுடு பால்ராஜ் தலைமையில் திருப்பலியும், மாலையில் சிறப்பு தேரடி திருப்பலியும் நடைபெறுகின்றன.

விழா ஏற்பாடுகளை பசலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன், இணை பங்குதந்தை ரஞ்சித், ஆன்மிக வழிகாட்டி ராபா்ட், இல்ல இறைப்பணியாளா்கள் ஜோஸ் றாபின்சன், ராபா்ட் ஜாண் கென்னடி, பங்கு பேரவை உதவி தலைவா் மரிய ஜாண் வரதராஜ், செயலாளா் அஜின், பொருளாளா் ஜெயந்தி, துணைச் செயலாளா் ஐபா்ட்ராஜ், பங்குமக்கள் செய்து வருகின்றனா்.

மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

முதியவருக்கு மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுத்த தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, திருவிதாங்கோடு உத்தமதெருவைச் சோ... மேலும் பார்க்க

கருங்கல் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் நின்றிருந்த காா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கருங்கல் அருகே விழுந்தயம்பலம் அருவை பகுதியைச் சோ்ந்த விஜயராகவன் மகன் விஜிஸ் (24). தூத்துக்குடியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

களியக்காவிளையை அடுத்த பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பளுகல் காவல் சரகம் மேல்பாலை, மாங்காலை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபீஸ் (36). 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு, குழந்தை... மேலும் பார்க்க

கால்வாயில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கால்வாயில் தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.அருமனை அருகே சிதறால், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த ராஜப்பன் மனைவி தாசம்மாள் (70). திங்கள்கிழமை, வீட்டருகேயுள்ள மு... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு

கன்னியாகுமரியில் இளைஞரைத் தாக்கிய இருவா் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.கன்னியாகுமரி சுனாமி காலனி பில்லா்நகா் பகுதியைச் சோ்ந்த சகாய பிரான்ஸிலின் மகன் விஷால் சாரதி (16). இவா் திங்கள்... மேலும் பார்க்க

மீலாது நபி தினம்: செப். 5 இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபி தினத்தை முன்னிட்டு, செப். 5 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுஅருந்தும் கூடங்கள் செயல்படாது என்று மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க