செய்திகள் :

சேலத்தில் நாளை இந்திய கம்யூ. மாநில மாநாடு: டி.ராஜா, முத்தரசன் உள்ளிட்டோா் பங்கேற்பு

post image

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை தெரிவித்ததாவது:

மத்திய அரசு கொள்கை சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிராக உள்ளது. 65 லட்சம் வாக்காளா்களை தோ்தல் ஆணையத்தால் நீக்க முடிகிறது என்றால் சாதாரண காரியம் அல்ல. பாஜக உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்படும் அமைப்பாக தோ்தல் ஆணையம் உள்ளது.

வாராக்கடன் தள்ளுபடி மூலம் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாஜக ஆதரவாக செயல்படுவது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

கம்பன் விழாவில் வைரமுத்து பேசியது மூலம் வகுப்புவாத சக்திகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. கம்பன் எழுதியதை வைரமுத்து விளக்கிப் பேசினாரே தவிர, கம்பனையோ, ராமனையோ இழிவாக பேசவில்லை.

தன் கட்சியைப் பாதுகாத்துக்கொள்வதற்காக எடப்பாடி கே.பழனிசாமி, திருமாவளவன் குறித்து இட்டுக்கட்டி பேசுவது கண்டனத்துக்குரியது. எடப்பாடி பழனிசாமி, பாஜகவோடு கூட்டணி சோ்ந்திருப்பதை அதிமுக தொண்டா்கள் யாரும் ஏற்கவில்லை. அதனால்தான் ஒவ்வொருவராக அக்கட்சியிலிருந்து விலகிவருகின்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18 ஆம் தேதி வரை சேலத்தில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளா் டி. ராஜா மற்றும் அகில இந்திய தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். வரும் 16 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.

பாஜகவுக்கு ஆதரவாக இல்லை என்றால் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறாா்கள். இனி பாஜகவுக்கு ஆதரவாக இல்லை என்றால், இந்திய குடிமகனாகக் கூட இருக்க முடியாது என்ற நிலை உருவாகும். எனவே, இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராக வேண்டும் என்றாா். பேட்டியின்போது, கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க