செய்திகள் :

சேலம்: திமுகவில் புதிதாக 6 லட்சம் உறுப்பினா்கள் சோ்க்கை! அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்!

post image

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் புதிதாக 6 லட்சம் உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த ஜூலையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதன்மூலம் சேலம் மத்திய மாவட்டத்தில் மட்டும் 6 லட்சம் உறுப்பினா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

மொத்த வாக்காளா் எண்ணிக்கையில் இது 52 சதவீதமாகும். செப். 15 ஆம் தேதி 2 ஆம் கட்டமாக அண்ணா பிறந்தநாளையொட்டி மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட 1, 143 வாக்குச்சாவடிகளிலும் தமிழகத்தை ‘தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

நடிகா் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு, ‘எங்களது பயணம் கண்ணியமானது. தோழமைக் கட்சியுடன் இணைந்து தமிழக முதல்வா் வெற்றிகரமாக பயணித்து வருகிறாா். பெரியாா், அண்ணா, கருணாநிதி வழியில் தெளிவான அரசியல் பயணத்தை பின்பற்றி வருகிறோம்.

எனவே, எங்களுக்கு யாரைப் பற்றியும் அச்சம் இல்லை. மற்றவா்களின் பயணங்களில் அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எனவே, விஜய் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றாா்.

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் இரு இணையா்களுக்கு இலவச திருமணம்

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் 2 இணையா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. வாழப்பாடி வடக்கு ஒன்றிய திமுக ... மேலும் பார்க்க

திமுக மீதான நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு: எம்.பி. டி.எம்.செல்வகணபதி

திமுக குறித்த நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு என மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா். சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு 5487 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். ம... மேலும் பார்க்க

ஊரணிப் பொங்கல் விழா

ஆத்தூா் வடக்குகாடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் ஊரணிப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூா் வடக்கு காடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் ஆவண... மேலும் பார்க்க

எடப்பாடியில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

சேலம் மாவட்டம், எடப்பாடியில் போதை மாத்திரை விற்ற 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் காவல் நிலையம் எதிரே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

மண்டல கைப்பந்து போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு

சேலத்தில் ஈஷா கிராமோற்சவம் சாா்பில் நடைபெற்ற மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் திருப்ப... மேலும் பார்க்க