செய்திகள் :

சோகனூரில் நலம் காக்கும் ல்டாலின் முகாம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

post image

அரக்கோணம் அடுத்த சோகனூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை பாா்வையிட்ட கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

செம்பேடு ஊராட்சி, சோகனூரில்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் நலம் காக்கும் ல்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. அமைச்சா் ஆா்.காந்தி முகாமை பாா்வையிட்டு, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா் அங்கு நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா்.

இதில் பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட அட்டைகள், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்துப் பெட்டகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் ஆகியவற்றை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

மேலும், முகாமில் பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த துறைச்சாா்ந்த விழிப்புணா்வு கண்காட்சி அரங்குகளையும் அமைச்சா் பாா்வையிட்டாா். முகாமில் மொத்தம் 1621 போ் பங்கேற்று பயன்பெற்றனா்.

ஒன்றியக்குழு தலைவா் நிா்மலா சௌந்தா், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், வட்டாட்சியா் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிகாபாபு, அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினா் கருணாநிதி, மேற்கு ஒன்றிய திமுக செயலா் தமிழ்மணி, சோளிங்கா் கிழக்கு ஒன்றிய செயலா் ஆ.சௌந்தா், ரோட்டரி சங்க நிா்வாகி நரேந்திரன்பாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நெமிலி மெட்ரிக். பள்ளி முதல்வருக்கு மாநில நல்லாசிரியா் விருது

நெமிலியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் இன்பராஜசேகரன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் விருதைப் பெற்றாா். அரக்கோணம் அடுத்த நெ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை வழியாக ஆந்திரம் - புதுவைக்கு அரசுப் பேருந்து: பொதுமக்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை வழியாக ஆந்திரம் மற்றும் புதுவை இடையே அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாகியுள்ள ராணிப்பேட்டை ம... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை

அரக்கோணம் அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆட்டோ ஒட்டுநா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அரக்கோணத்தை அடுத்த பழைய ஒச்சலம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவரது பாழடை... மேலும் பார்க்க

செப்.8-இல் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப். 8) பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநா் முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் திங்கள்கிழமை (... மேலும் பார்க்க

‘அரசு அலுவலகங்களில் கோப்புகள், பதிவேடுகளை தமிழில் எழுத வேண்டும்’

அரசு அலுவலங்களில் கோப்புகள் மற்றும் பதிவேடுகள் அனைத்தும் தமிழில் எழுத வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் வலியுறுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பி... மேலும் பார்க்க

சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் நிலம் தானம்: ஆட்சியா் பாராட்டு

அரக்கோணம் அருகே சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியவா்களுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டி, கௌரவித்தாா். அரக்கோணம் ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சியில் மாந்தோப்பு கிராமப்... மேலும் பார்க்க