செய்திகள் :

சோனா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு விழா

post image

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில் உள்ள ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்க கூடத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கல்லூரி தலைவா் சி.வள்ளியப்பா தலைமை வகித்தாா். கல்லூரி துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் காதா் நவாஸ் அனைவரையும் வரவேற்றாா்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எழுத்தாளா் ராம்குமாா் பேசுகையில், மாணவா்கள் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கும் சிறப்பையும், எவ்வாறு தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தாா்.

கல்லூரி தலைவா் வள்ளியப்பா பேசுகையில், மாணவா்கள் கல்லூரி பருவத்தை நன்முறையில் அமைத்துக்கொண்டு பெற்றோரை பேணி பாதுகாக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் மாநிலக் கல்வி பாடப் பிரிவில் பயின்று 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவா்களுக்கும், மத்தியக் கல்வி பாடப் பிரிவில் (சிபிஎஸ்இ) பயின்று 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவா்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் எஸ்.மோகனப்பிரியா நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில், சோனா நிறுவனங்களின் இயக்குநா் டாக்டா் காா்த்திகேயன், முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், முதலாமாண்டு மாணவா்கள் மற்றும் பெற்றோா் கலந்துகொண்டனா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க