செய்திகள் :

ஜகதீப் தன்கரின் ராஜிநாமா ஏற்பு!

post image

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி, ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு ஜகதீப் தன்கர் திங்கள்கிழமை இரவு கடிதம் அனுப்பினார்.

மேலும், அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ராஜிநாமாவை ஏற்க வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி அனுப்பியதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை கூடியது. மாநிலங்களவை கூட்டத்தொடருக்கு வழக்கம்போல் ஜகதீப் தன்கர் தலைமை தாங்கிய நிலையில், இரவு ராஜிநாமா செய்திருப்பது எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களுடனும் ஜகதீப் தன்கர் சகஜமாக பேசியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மத்திய அரசுக்கும் ஜகதீப் தன்கருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை என்றும் அவர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஒரு அமைச்சர்கூட பங்கேற்கவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

2027 வரை குடியரசு துணைத் தலைவரின் பதவிக் காலம் இருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜகதீப் தன்கர் ராஜிநாமா செய்துள்ளார்.

இதையடுத்து, விரைவில் குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

President Draupadi Murmu has accepted the resignation of Vice President Jagdeep Dhankhar.

இதையும் படிக்க : குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமா!

குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் சந்திப்பு!

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை) காலை தொடங்கிய நிலையில், மாநி... மேலும் பார்க்க

கட்சிரோலி வளர்ச்சியைத் தடுக்க வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தும் நகர்ப்புற நக்சல்கள்: ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே இருந்துவரும் நகர்ப்புற நக்சல்கள் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பி வருவதாக மாநில முதல்வர் தேவேந்தி ஃபட்னவீஸ் கூறினார்.கட்சிரோலி மாவட்டத்தில் பல்வேறு தி... மேலும் பார்க்க

ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஓப்போ கே 13எக்ஸ் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என ஓப்போ தெரிவித்துள்ளது.இதில், 6000mAh பேட்டரி திறன், 50... மேலும் பார்க்க

ஜீவனாம்சமாக ரூ.12 கோடி, பிஎம்டபிள்யு, மும்பை வீடு கேட்ட பெண்! பதில் கொடுத்த உச்ச நீதிமன்றம்

படித்த, திறமையான பெண்கள், தங்களது வாழ்வாதாரத்துக்காக, தாங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், ஜீவனாசம் என்ற பெயரில், கணவரிடமிருந்து இடைக்கால பராமரிப்புகளைக் கேட்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெர... மேலும் பார்க்க

ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவுக்கு ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளது: காங்கிரஸ்!

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை திங்கள்கிழமை தி... மேலும் பார்க்க

காதலை மறுத்தப் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்த இளைஞர்! தீரத்துடன் மீட்டவருக்கு குவியும் பாராட்டு!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டிய நிலையில், தீரத்துடன் பெண்ணை மீட்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது.இளம... மேலும் பார்க்க