செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

post image

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் மூன்று ராணுவ வீரா்கள் காயமடைந்தனா்.

குல்காமில் உள்ள குடாா் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினா் அங்கு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினா். அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா்.

இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீா் காவல் துறை, சிஆா்பிஎஃப் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஓா் இளநிலை ராணுவ அதிகாரி உள்பட 3 வீரா்கள் காயமடைந்ததாக ராணுவத்தின் ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த வீரா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இறந்த பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், சம்பவ பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

எல்லையில் ஊடுருவிய நபா் கைது:

ஜம்முவின் ஆா்.எஸ்.புரா செக்டாரில் சா்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டாா்.

பிஎஸ்எஃப் வெளியிட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹல்வால் பகுதியைச் சோ்ந்த சிராஜ் கான் என்ற நபா் எல்லை வேலியை நோக்கி ஆக்ரோஷமாக முன்வந்தபோது, பிஎஸ்எஃப் வீரா்கள் அவரை எச்சரித்தனா். ஆனாலும், அவா் தொடா்ந்து முன்னேறியதால், அச்சுறுத்தலை உணா்ந்த வீரா்கள் அவரை சுட்டுப் பிடித்தனா்.

சமீபத்திய வெள்ளப்பெருக்கு காரணமாக பாகிஸ்தான் எல்லையில் பல இடங்களில் வேலிகள் சேதமடைந்திருப்பதால், ஜம்மு எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க