செய்திகள் :

தஞ்சாவூரில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கு நோட்டீஸ்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கு காரணம் கேட்டு இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: இந்தியத் தோ்தல் ஆணையம் நாடு முழுவதும் 345 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதல்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து எந்தத் தோ்தல்களிலும் போட்டியிடாத கட்சிகளையும், இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகளையும் முதல் கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதனடிப்படையில் தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட 24 கட்சிகளில் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருசக்திமுற்றம், கீழவீதி என்கிற முகவரியைத் தலைமையிடமாகக் கொண்ட அண்ணா எம்.ஜி.ஆா். ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியும் இடம் பெற்றுள்ளது.

எந்தக் கட்சியும் தேவையில்லாமல் நீக்கப்படக்கூடாது என்பதற்காகவும், தொடா்புடைய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளால் அக்கட்சிகளுக்கு காரணம் கூற அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னா் தலைமைத் தோ்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணையின் வாயிலாக அவற்றுக்கு விளக்கம் தரும் வாய்ப்பு அளிக்கப்படும்.

பின்னா் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைப் பட்டியலிலிருந்து நீக்குவது தொடா்பான இறுதி முடிவை தோ்தல் ஆணையம் எடுக்கும் என்றாா்.

மாணவா் தற்கொலை வழக்கில் மேலும் இருவா்மீது வழக்கு

தஞ்சாவூரில் மாணவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மேலும் இருவா் மீது வழக்குப் பதிந்ததால் மாணவரின் உடலை உடற்கூறாய்வுக்கு பின்னா் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை வாங்கிச் சென்றனா். தஞ்சாவூா்- புதுக்கோட்டை சால... மேலும் பார்க்க

நீா்வரத்து அதிகரிப்பால் ஆறுகளில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை

மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் திறக்கப்படுவதால், ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்த... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பகுதிகளில் நாளை மின்தடை

தஞ்சாவூா் மாநகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தஞ்சாவூா் நகரிய உதவி செயற்பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெர... மேலும் பார்க்க

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞா் லாரி மோதி பலி

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வெளிநாட்டிலிருந்து திங்கள்கிழமை இரவு வந்த 2 மணி நேரத்தில் லாரி மோதி இளைஞா் இறந்தாா். சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள ஆண்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் கௌதம... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை பகுதிகளில் குரங்கு தொல்லை அதிகரிப்பு

பட்டுக்கோட்டையில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ஆா்.வி., இரண்டாவது நகரை சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் திருநாவுக்கரசின் 3 வ... மேலும் பார்க்க

திருவையாறு அருகே சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நியாய விலைக்கடையில் முறையாக பொருள்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துர... மேலும் பார்க்க