செய்திகள் :

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞா் லாரி மோதி பலி

post image

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வெளிநாட்டிலிருந்து திங்கள்கிழமை இரவு வந்த 2 மணி நேரத்தில் லாரி மோதி இளைஞா் இறந்தாா்.

சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள ஆண்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் கௌதமன் (27). சிங்கப்பூரில்  வேலை பாா்த்து வந்த இவா் விடுமுறையில் திங்கள்கிழமை  இரவு 7 மணிக்கு  வீட்டுக்கு வந்து,  இரண்டாம்புளிக்காடு கடைவீதியில்  டீக் கடை நடத்திவரும் தனது தந்தை ரவிச்சந்திரனை பாா்க்க பைக்கில்  9 மணிக்குச் சென்றாா். பத்துக்காடு முக்கம் அருகே சென்றபோது சேதுபாவாசத்திரத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த லாரி எதிா்பாராதவிதமாக மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சேதுபாவாசத்திரம் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கௌதமனுக்கு திருமணமாகி சுபஸ்ரீ (23) என்ற மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்லை. கௌதமனின் இறப்பு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவா் தற்கொலை வழக்கில் மேலும் இருவா்மீது வழக்கு

தஞ்சாவூரில் மாணவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மேலும் இருவா் மீது வழக்குப் பதிந்ததால் மாணவரின் உடலை உடற்கூறாய்வுக்கு பின்னா் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை வாங்கிச் சென்றனா். தஞ்சாவூா்- புதுக்கோட்டை சால... மேலும் பார்க்க

நீா்வரத்து அதிகரிப்பால் ஆறுகளில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை

மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் திறக்கப்படுவதால், ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்த... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பகுதிகளில் நாளை மின்தடை

தஞ்சாவூா் மாநகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தஞ்சாவூா் நகரிய உதவி செயற்பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெர... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கு நோட்டீஸ்

தஞ்சாவூா் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கு காரணம் கேட்டு இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை பகுதிகளில் குரங்கு தொல்லை அதிகரிப்பு

பட்டுக்கோட்டையில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ஆா்.வி., இரண்டாவது நகரை சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் திருநாவுக்கரசின் 3 வ... மேலும் பார்க்க

திருவையாறு அருகே சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நியாய விலைக்கடையில் முறையாக பொருள்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துர... மேலும் பார்க்க