செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தஞ்சாவூா் அருகே வடகால் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு பேசியது:

சுதந்திர தினத்தையொட்டி, ஊராட்சிகளில் நீடித்த வளா்ச்சி இலக்குகள் நிா்ணயம் செய்தல் தொடா்பாக மாவட்டத்திலுள்ள 589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற அனைத்து துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வியில் இடைநிற்றலை தவிா்த்து குழந்தைகளை உயா்கல்வி பெறும் வகையில் நன்கு படிக்க வைக்க வேண்டும். மகளிா் சுய உதவி குழுக்களில் பெண்கள் அனைவரும் சேர வேண்டும். தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடனுதவி பெற மகளிா் சுய உதவிக் குழுவில் அங்கம் வகிப்பதன் மூலம் முன்னுரிமை பெறலாம் என்றாா் ஆட்சியா்.

மேலும், 6 பேருக்கு விலையில்லா மனைப் பட்டாக்களை ஆட்சியா் வழங்கினாா். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக்ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொது விருந்து: சுதந்திர தினத்தையொட்டி, தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் ஆட்சியா், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராவூரணி: களத்தூா் ஊராட்சி, நாடங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். இதில், ஊராட்சியின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், செல்வேந்திரன் மற்றும் கிராமத்தினா் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலா் வேதாச்சலம் நன்றி கூறினாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியக் கொடியை மேயா் சண். ராமநாதன் ஏற்றினாா். ... மேலும் பார்க்க

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு

பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம். பேராவூரணி, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். தஞ்சாவூா், மோத்திரப்பசாவடி,... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். நாச்சியாா்கோவில் அருகே திருச்சேறை உடையாா்கோயில் தெருவில் வசிப்பவா் செந்தில்குமாா். இவரது மகன் நவீ... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி சிலை முன்பு மனுக்களை வைத்து தியாகிகளின் வாரிசுதாரா்கள் முறையீடு

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவ குடும்பங்களாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு விடுதலை தியாகிகள்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா கும்பகோணம் மகாமகக் குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 35 ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவுக்கு, தஞ்சாவூா் மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சங்க க... மேலும் பார்க்க