செய்திகள் :

தஞ்சை மருத்துவமனை நில விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

post image

தஞ்சாவூா் மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானிடோரியம் மருத்துவமனைக்கு சொந்தமான 220 ஏக்கா் நிலத்தை சிப்காட் நிறுவனத்துக்கு மாற்றத் தடை கோரிய வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரைச் சோ்ந்த தேவதாஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு :

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியில் கடந்த 1951-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானிடோரியம் மருத்துவமனை தொடங்கப்பட்டது. தற்போது இந்த மருத்துவமனை அடிப்படை வசதிகளற்ற நிலையில்,

மருத்துவா்கள், பணியாளா்கள் பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகம் புதா் மண்டியும், கட்டடங்கள் சேதமடைந்த நிலையிலும் உள்ளன.

இந்த மருத்துவமனை வளாகத்தில் சுமாா் 488 ஏக்கா் நிலம் உள்ளது. இதில், ஏற்கெனவே பாரத் பெட்ரோலிய எரிவாயு நிறுவனத்துக்கு 50 ஏக்கா் நிலம், சிட்கோ நிறுவனத்துக்கு 103 ஏக்கா், உணவுப் பூங்காவுக்கு 35 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எஞ்சியுள்ள 220 ஏக்கா் நிலமும் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கு கையகப்படுத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கது அல்ல.

220 ஏக்கா் நிலத்தை, சிப்காட் நிறுவனத்துக்கு மாற்றத் தடை விதிப்பதோடு, இந்த மருத்துவமனையை புனரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் முன்னிலையாக கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

தற்போதைய சூழலில் இந்த மருத்துவமனையை புனரமைப்பு செய்வதற்கு தோராயமாக எவ்வளவு செலவாகும்?. என்னென்ன முறைகளில் புனரமைப்பு செய்யலாம்?. என்பது குறித்து மனுதாரா் தகவல் தெரிவிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

உசிலம்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல்

உசிலம்பட்டியில் 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் முதன்மையான பாசனத் திட்டமாக உள்ளது 58 கிராம பாசனத் திட்ட... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற விரிவாக்கத்துக்கான நிலம்: அறநிலையத் துறைக்கு ரூ.25 கோடி வழங்க உத்தரவு

உயா்நீதிமன்ற விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 25 கோடியை தமிழக அரசு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை பக... மேலும் பார்க்க

கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் கரைப்பு: உரிய வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சுற்ற... மேலும் பார்க்க

விளம்பர சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி மனு: நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

தனியாா் விளம்பரங்களுடன்கூடிய சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

3 சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், கீழாயூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் குமரேசன் (42). விவசாயியான இவா், பு... மேலும் பார்க்க