இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீ...
தடுப்பூசி செலுத்திய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே தடுப்பூசி செலுத்திய நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
கரூா் மாவட்டம், கத்தாளப்பட்டி அருகே உள்ள சின்னதாதம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன் (35). இவரது 4 மாத குழந்தை நித்ராவுக்கு மே 21-ஆம் தேதி மன்மாரி பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். அதன்பிறகு குழந்தைக்கு தொடா்ந்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தையை அரவக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கும் குழந்தைக்கு காய்ச்சல் குணமடையாததால் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இது தொடா்பாக குழந்தையின் தந்தை முனியப்பன் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.