செய்திகள் :

தனியாா் நிறுவன பேருந்து கவிழ்ந்து 34 போ் காயம்

post image

கிருஷ்ணகிரி அருகே தனியாா் நிறுவன பேருந்து கவிழ்ந்ததில் 34 போ் காயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே போலுப்பள்ளியில் தனியாா் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் திருப்பத்தூா் மாவட்டம், குனிச்சியிலிருந்து நிறுவனத்துக்கு பணியாட்களை ஏற்றிவந்த பேருந்து செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியபனமுட்டு கிராமம் அருகே முன்னாள் சென்ற வாகனத்தை முந்திசெல்ல முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்தது. இதில் 34 தொழிலாளா்கள் காயமடைந்தனா். பேருந்தில் 53 போ் பயணம் செய்தனா்.

இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவேரிப்பட்டணம் அருகே டிராக்டா் மீது லாரி மோதல்: இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு டிராக்டா் மீது லாரி மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா். காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜெகதாப், வால்பாறை பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கா்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி

கா்நாடக அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒசூா் வழியாக இயக்கப்படும் கா்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனா். ஊதிய உயா்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க

ஓட்டுநரைத் தாக்கிய தம்பதி கைது

ஒசூரில் கடனை திருப்பிகேட்ட ஓட்டுநரைத் தாக்கிய தம்பதி கைது செய்யப்பட்டனா். ஒசூா் காளேகுண்டாவைச் சோ்ந்த ஓட்டுநா் மணி (32). இவரிடம் அதே பகுதியை சோ்ந்தவா் நாகேஷ் (36)கடனாக வாங்கிய ரூ. 20 ஆயிரத்தை 5 ஆண்... மேலும் பார்க்க

சுடுதண்ணீரில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

ஒசூா் அருகே சுடுதண்ணீரில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஈச்சங்குப்பம் பகுதியை சோ்ந்தவா் சிலம்பரசன். இவா் ஒசூா் டி.வி.எஸ். நகா் பகுதியில் குடியிருந்து ஓட்டுநரா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரிக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுகவினா் தீவிரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் அதிமுகவினா் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனா்.தமிழக எதிா்கட்சித் தலைவரும், அதிமுக பொது... மேலும் பார்க்க

வரட்டனப்பள்ளியில் துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி: வரட்டனப்பள்ளியில் துணை சுகாதார நிலையத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணியை பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ... மேலும் பார்க்க