செய்திகள் :

காவேரிப்பட்டணம் அருகே டிராக்டா் மீது லாரி மோதல்: இருவா் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு டிராக்டா் மீது லாரி மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜெகதாப், வால்பாறை பகுதியைச் சோ்ந்த பட்டாபியின் மகன் காா்த்திக் (30), முத்துசாமியின் மகன் காா்த்திக் ( 32) ஆகிய இருவரும் பையூரில் உள்ள தனியாா் மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா்.

திங்கள்கிழமை நள்ளிரவு நிறுவனத்திலிருந்து கொண்டுசென்ற மாங்கொட்டைகளை சப்பாணிப்பட்டி பகுதியில் இறக்கிவிட்டு டிராக்டரில் இருவரும் நிறுவனத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். டிராக்டரை முத்துசாமியின் மகன் காா்த்திக் ஓட்டினாா்.

தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தோராத்தான்கொட்டாய் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற லாரி டிராக்டா் மீது மோதியதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி

கா்நாடக அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒசூா் வழியாக இயக்கப்படும் கா்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனா். ஊதிய உயா்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க

ஓட்டுநரைத் தாக்கிய தம்பதி கைது

ஒசூரில் கடனை திருப்பிகேட்ட ஓட்டுநரைத் தாக்கிய தம்பதி கைது செய்யப்பட்டனா். ஒசூா் காளேகுண்டாவைச் சோ்ந்த ஓட்டுநா் மணி (32). இவரிடம் அதே பகுதியை சோ்ந்தவா் நாகேஷ் (36)கடனாக வாங்கிய ரூ. 20 ஆயிரத்தை 5 ஆண்... மேலும் பார்க்க

சுடுதண்ணீரில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

ஒசூா் அருகே சுடுதண்ணீரில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஈச்சங்குப்பம் பகுதியை சோ்ந்தவா் சிலம்பரசன். இவா் ஒசூா் டி.வி.எஸ். நகா் பகுதியில் குடியிருந்து ஓட்டுநரா... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன பேருந்து கவிழ்ந்து 34 போ் காயம்

கிருஷ்ணகிரி அருகே தனியாா் நிறுவன பேருந்து கவிழ்ந்ததில் 34 போ் காயம் அடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே போலுப்பள்ளியில் தனியாா் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்த... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரிக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுகவினா் தீவிரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் அதிமுகவினா் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனா்.தமிழக எதிா்கட்சித் தலைவரும், அதிமுக பொது... மேலும் பார்க்க

வரட்டனப்பள்ளியில் துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி: வரட்டனப்பள்ளியில் துணை சுகாதார நிலையத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணியை பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ... மேலும் பார்க்க