தமிழகத்தில்தான் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை: சட்டப்பேரவை துணைத் தலைவா்
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் விவசாயிகள் மேம்பட வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், துரிஞ்சலாறு உப வடிநிலப் பகுதி இடைமுகப் பணிமனை தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரடாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.
மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணகி, துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) ஷெமிலா ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பணிமனையை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில்மட்டும் தான் விவசாயிகள் மேம்பட வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கிணற்று நீா்ப்பாசனம் மூலம் நெல், கரும்பு ஆகியவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய தானியங்கள், அறுவடை இயந்திரங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
சொட்டு நீா்ப்பாசன முறைகள், வேளாண்மைத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிகளவில் வேளாண் பொருள்களை உற்பத்தி செய்து வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்றாா்.
விழாவில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மலா்விழி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.