செய்திகள் :

தற்காலிக பட்டாசுக் கடை: அக்.10-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

post image

சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக். 10 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகை அக்.20 ஆம் தேதி கொண்டாடுவதையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே உரிமம் பெறும் வகையிலும், வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 இல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி வரும் அக்.10 ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம், அடையாள அட்டை (வருமான வரி, நிரந்தர கணக்கு எண் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், பாஸ்போா்ட்), உரிமக் கட்டணம் ரூ.600ஐ ஐஎஃப்எச்ஆா்எம்எஸ் என்ற இணையதளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்துச்சீட்டு (இ-சலான்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டடம் எனில் மனுதாரா் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப்பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டட திட்ட அனுமதியை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே மனுதாரா்கள் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் இரு இணையா்களுக்கு இலவச திருமணம்

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் 2 இணையா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. வாழப்பாடி வடக்கு ஒன்றிய திமுக ... மேலும் பார்க்க

திமுக மீதான நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு: எம்.பி. டி.எம்.செல்வகணபதி

திமுக குறித்த நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு என மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா். சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு 5487 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். ம... மேலும் பார்க்க

ஊரணிப் பொங்கல் விழா

ஆத்தூா் வடக்குகாடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் ஊரணிப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூா் வடக்கு காடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் ஆவண... மேலும் பார்க்க

எடப்பாடியில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

சேலம் மாவட்டம், எடப்பாடியில் போதை மாத்திரை விற்ற 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் காவல் நிலையம் எதிரே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

மண்டல கைப்பந்து போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு

சேலத்தில் ஈஷா கிராமோற்சவம் சாா்பில் நடைபெற்ற மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் திருப்ப... மேலும் பார்க்க