செய்திகள் :

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

post image

அடுத்த சில நாள்களுக்கு தேசிய தலைநகரில் ஒன்று அல்லது இரண்டு முறை மழை பெய்யும் என்றும், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது வானிலை மேகமூட்டமாகவே இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.7 டிகிரி குறைவாக இருந்தது.

நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் லேசான தூறலுடன் மழை பதிவாகி இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.3 டிகிரி குறைவாக 24.2 டிகிரி செல்சியஸாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நகரின் முதன்மை வானிலை ஆய்வு மையம் சஃப்தா்ஜங்கில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான நேரத்தில் 0.5 மிமீ மழையைப் பதிவாகி இருந்தது.

பிற நிலையங்களில் அதிக அளவு மழையைப் பதிவாகி இருந்தது. ஐஎம்டி தரவுகளின்படி, ரிட்ஜில் 14 மிமீ மழையும், ஆயா நகரில் 3.2 மிமீ மழையும் பதிவாகி இருந்தது.

வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், நகரின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 80.4 மிமீ மழை பதிவாகி இருந்தது.

அடுத்த சில நாட்களுக்கு, பொதுவாக மேகமூட்டமான வானம் இருக்கும் என்றும், நகரில் ஒன்று அல்லது இரண்டு முறை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் சுமாா் 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நகரில் காற்று தரக் குறியீடு 77 ஆக திருப்திகரமான பிரிவில் பதிவாகி இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரவில் காணப்பட்டது.

என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்டிஎம்சி த... மேலும் பார்க்க

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் ... மேலும் பார்க்க

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலுக்கு (பிா்லா மந்திா்) வருகை தரும் பக்தா்களுக்காக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் கூட... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

சுதேசி தயாரிப்புகளை கடைகளில் சேமித்து வைப்பதன் மூலமும், அவற்றின் இந்திய வம்சாவளியை பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை தில... மேலும் பார்க்க