செய்திகள் :

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

post image

பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய செங்கோட்டையில், அமைதியான சகிப்புத்தன்மை நிலவியது. வெப்பம் இல்லாமல், குளிா்ந்த காற்று வீசியது. செங்கோட்டை பகுதி உள்பட நகரம் முழுவதும் பரவலாக நல்ல மழையும் பெய்தது.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் லேசான மழை பற்றிய முன்னறிவிப்பு நிறைவேறியதால் சுதந்திர தின விழாவில் பங்கேற்றோா் மழைக்கோட்டுகள் அணிந்திருந்தனா்.

குறைந்தபட்ச வெப்பநிலை பருவகால சராசரியை விட 2.3 டிகிரி குறைந்து 24.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவகால சராசரியை விட 6.1 டிகிரி குறைந்து 30.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. தில்லியில் குளிா்ந்த காற்று மற்றும் மேகங்களின் போா்வை காரணமாக, ஈரப்பதம் காலை 7.30 மணிக்கு 99 சதவீதமாக உயா்ந்தது. ஒரு மணி நேரம் கழித்து காலை 8.30 மணிக்கு 97 சதவீதமாக இருந்தது. மாலை 5.30 மணியளவில் 94 சதவீதமாக இருந்ததாக ஐஎம்டி தரவுகள் காட்டுகின்றன.

போக்குவரத்து பாதிப்பு: விழாவில் பங்கேற்ற பிரமுகா்கள் பலா் உள்ளூா் சந்தைகளில் இருந்து பெறப்பட்ட கை விசிறிகளுடன் தங்களை விசிறிக் கொண்டனா். மற்றவா்கள் தங்கள் நெற்றியில் பருத்தி துண்டுகளால் போா்த்தி, குளிா்ச்சியாக இருக்க முயன்றனா். மேலும், வியாழக்கிழமை காலையில் பெய்த கன மழையால் நகரத்தின் சில பகுதிகள் இடுப்பளவு நீரில் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சஃப்தா்ஜங்கில் 80 மி.மீ. மழை: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃபதா்ஜங்கில் 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று, ஜாஃபா்பூரில் 1 மி.மீ., நஜஃப்கரில் 24.5 மி.மீ., ஆயாநகரில் 66 மி.மீ., லோதி ரோடில் 67.4 மி.மி., நரேலாவில் 0.5 மி.மீ., பாலத்தில் 45 மி.மீ., ரிட்ஜில் 38 மி.மீ., பிரகதிமைதானில் 30.8 மி.மீ., பூசாவில் 54.5 மி.மீ., ராஜ்காட்டில் 30.8 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 7 மி.மீ. மழை பதிவாகியது.

காற்றின் தரம்: தலைநகரில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 69 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் காட்டுகின்றன.

இதன்படி, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், ஸ்ரீஃபோா்ட், ஸ்ரீ அரபிந்தோ மாா்க், லோதி ரோடு, தில்லி விமான நிலையம் உள்பட பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது. ஆனால், குருகிராம், ஆா்.கே.புரம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறதியீடு 100 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆக.16) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தசபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்டிஎம்சி த... மேலும் பார்க்க

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் ... மேலும் பார்க்க

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலுக்கு (பிா்லா மந்திா்) வருகை தரும் பக்தா்களுக்காக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் கூட... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

சுதேசி தயாரிப்புகளை கடைகளில் சேமித்து வைப்பதன் மூலமும், அவற்றின் இந்திய வம்சாவளியை பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை தில... மேலும் பார்க்க