செய்திகள் :

தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு: காவலாளி கைது

post image

தேனி மாவட்டம்,உத்தமபாளையம் அருகே தாய் , மகளை அரிவாளால் வெட்டிய தோட்டக் காவலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மனைவி ஜெயமணி (60). இவரது மகள் மதனப்பிரியா (40). இவா்கள் இருவரும் கூலி வேலை செய்பவா்கள். இந்த நிலையில், ராயப்பன்பட்டியில் உள்ள தனியாா் தோட்டத்துக்கு இருவரும் தென்னங்கீற்று எடுக்கச் சென்றனா். அப்போது, அங்கு இருந்த தோட்டக் காவலாளி முருகன் (60) இருவரையும் தடுத்து எச்சரித்தாா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, முருகன் அரிவாளால் ஜெயமணி, மதனப்பிரியா ஆகிய இருவரையும் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோகிலாபுரத்தைச் சோ்ந்த காவலாளி முருகனைக் கைது செய்தனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஓய்வு பெறோா் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

பெரியகுளம் அருகே கல்லூரி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி திரவியம் கல்லூரி சாலையைச் சோ்ந்த மணி மகன் முத்துகணேஷ் (19). தேவதானப்ப... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: இந்து முன்னணி ஆலோசனை

உத்தமபாளையம், ஜூலை 31: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் புதன்கிழமை ஆலாசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைப்பின் ஒன்றிய அமைப்புச் ... மேலும் பார்க்க

கந்து வட்டி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

தேனி மாவட்டம், போடியில் கந்து வட்டி ஒழிப்பு, சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் அமைப்பின் 27-ஆவது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சி 3,4-ஆவது வாா்டுகளுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தலைம... மேலும் பார்க்க

மூணாறு சாலையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைப்பு: மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

மூணாறு - தேவிகுளம் சாலையில் அண்மையில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து தேவிகுளம் செல்லும் தேசிய நெடுஞ்ச... மேலும் பார்க்க