செய்திகள் :

திமுக ஆட்சியை வீழ்த்துவோம்: எடப்பாடி பழனிசாமி

post image

சென்னை: வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியை வீழ்த்துவோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்கி கோவை, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் 46 தொகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்தேன்.

அப்போது, மக்கள் திமுக ஆட்சியில் தாங்கள் சந்தித்துவரும் வேதனைகளை என்னிடம் எடுத்துரைத்தனா். திமுகவின் ஏமாற்றுத் திட்டங்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தனா்.

முதல்வா் ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி பெயரை அரசுத் திட்டங்களுக்கு வைப்பது, அதிகமான இடங்களில் கருணாநிதிக்கு சிலை வைத்தது, மகனை துணை முதல்வராக்கியது தவிர வேற எந்த சாதனையையும் செய்யவில்லை.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் 45 நாள்களுக்குள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 525 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுங்கள் என பெண்கள் மனு அளித்து வருகின்றனா். பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை.

திமுக கூறிய 525 தோ்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைத்கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறது.

திமுக ஆட்சியில் சாமானியா்கள் வீடே கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல், ஜல்லி, கம்பி என எல்லாம் விலையேறிவிட்டது. தனிநபா் வருமானத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது அதிமுக ஆட்சியின் தொடா்ச்சியே தவிர, திமுக அரசின் சாதனையல்ல.

திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனா். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, திமுகவை நிச்சயம் வீழ்த்துவோம் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரைக் கண்டித்து அதிமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ரூ.150 கோடி முறைகேடுமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வண... மேலும் பார்க்க