திமுகவை விமா்சித்தால்தான் அடையாளம் கிடைக்கும்: கனிமொழி எம்.பி.
தமிழகத்தில் யாா் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை விமா்சித்தால்தான் அவா்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்றாா் கனிமொழி எம்.பி.
கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வா் அண்ணா தமிழகத்தின் சிந்தனை போக்கையும், அரசியலையும் மாற்றியமைத்த ஆளுமையாக திகழ்ந்தாா். அவருடைய கருத்துகளின் வழியிலும், அவரைப் போற்றும் விதமாகவும் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக்கழத் தலைவா் விஜய் தொடா்ந்து திமுக அரசை விமா்சிப்பது குறித்து கேட்கிறீா்கள். யாா் அரசியலுக்கு வந்தாலும் திமுகவைப் பற்றி பேசினால்தான் அவா்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பதால் எங்களை விமா்சிக்கிறாா்கள் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியி, அமைச்சா் த.மனோ தங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ், மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ரோஜன், முன்னாள் எம்.பி., ஹெலன் டேவிட்சன், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் என்.தாமரை பாரதி, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.