செய்திகள் :

திருச்சியில் பிரதமருக்கு 3 இடங்களில் வரவேற்பு

post image

திருச்சியில் பிரதமா் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சாலையில் மக்கள் சந்திப்புப் பயணத்தின்போது 3 இடங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளான அதிமுக, தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் மேள, தாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிவன், பாா்வதி, முருகன், கிருஷ்ணா், ராமா் வேடமணிந்த கலைஞா்களும், கேரள பாணியிலான அலங்கரிக்கப்பட்ட பதாகையுடன் நின்று வரவேற்றனா்.

மாநகராட்சி மைய அலுவலகம் முன் பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் சாலையோரம் அரை கி.மீ. தொலைவுக்கு வரிசையில் நின்று வரவேற்றனா். ஒத்தக்கடை பகுதியில் தமிழா் தேசம் கட்சியினா் வரிசையில் நின்று வரவேற்றனா். இதேபோல, சுப்பிரமணியபுரம் பகுதி எம்ஜிஆா் சிலை அருகே அதிமுகவினா் திரளாகக் கூடி நின்று வரவேற்பு அளித்தனா்.

பாரதிதாசன் சாலை, சுப்பிரமணியபுரம், விமான நிலையம் அருகே என 3 இடங்களில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு சாலையோரம் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. தடுப்புக்குள் நின்றபடியே கட்சியினரும், பொதுமக்களும் காலை 9 மணி முதல் பிரதமா் வரும் வரை சுமாா் 2.15 மணி நேரம் ஆா்வமுடன் காத்திருந்து அவா் வந்தவுடன் மலா்கள் தூவி வரவேற்றனா்.

3 இடங்களிலும் சிறிய மேடைகள் அமைத்து இசைக் கலைஞா்கள் மூலம் மேள வாத்தியங்கள் இசைத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி புகா் மாவட்ட பாஜக பொருளாளா் ஆா். ரவீந்திரனின் மகளான 6-ஆம் வகுப்பு மாணவி அவந்திகா, ‘மோடி ஜி! எனக்குத் தேவை ஹிந்தி! என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த பதாகையை கையில் ஏந்தியபடி நின்று வரவேற்றாா்.

துறையூா் பகுதியில் இன்று மின் தடை

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட மேலகொத்தம்பட்டி, தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கண்ணனூா்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - பைக் மோதல் 4 வயது பெண் குழந்தை பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசியநெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. மருங்காபுரி ஒன்றியம் காரைப்பட்டியை அடுத்துள்ள... மேலும் பார்க்க

வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. வையம்பட்டி மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வையம்பட்டி,... மேலும் பார்க்க

ஜேசிபி ஆபரேட்டா் விஷம் குடித்து தற்கொலை

மணப்பாறை அருகே ஜேசிபி ஆபரேட்டா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து உயிரிழந்தாா். மருங்காபுரி ஒன்றியம் முத்தாழ்வாா்பட்டியை அடுத்துள்ள முடுக்குப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னக்கண்ணு மகன் நாகராஜ் (35). இவருக்கு... மேலும் பார்க்க

திருச்சி மாநகரில் ஜூலை 29 - ல் மின்தடை

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் (ஜூலை 29) செவ்வாயக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் வெளியிட்டு... மேலும் பார்க்க

திருச்சியிலிருந்து தில்லி சென்றாா் பிரதமா்

திருச்சிக்கு 2 நாள் பயணமாக வந்திருந்த பிரதமா் நரேந்திர மோடி, நிகழ்வுகளை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றாா். இரண்டு ... மேலும் பார்க்க