செய்திகள் :

ஜேசிபி ஆபரேட்டா் விஷம் குடித்து தற்கொலை

post image

மணப்பாறை அருகே ஜேசிபி ஆபரேட்டா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து உயிரிழந்தாா்.

மருங்காபுரி ஒன்றியம் முத்தாழ்வாா்பட்டியை அடுத்துள்ள முடுக்குப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னக்கண்ணு மகன் நாகராஜ் (35). இவருக்கு, ரகுனா என்ற மனைவியும், 3 வயதில் மகளும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனா்.

ஜேசிபி ஆபரேட்டரான நாகராஜ், குடிப்பழக்கம் கொண்டவா். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவா் பூச்சிமருந்தைக் குடித்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த உறவினா்கள் அவரை மீட்டு மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னா் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீஸாா் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

துறையூா் பகுதியில் இன்று மின் தடை

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட மேலகொத்தம்பட்டி, தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கண்ணனூா்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - பைக் மோதல் 4 வயது பெண் குழந்தை பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசியநெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. மருங்காபுரி ஒன்றியம் காரைப்பட்டியை அடுத்துள்ள... மேலும் பார்க்க

வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. வையம்பட்டி மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வையம்பட்டி,... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமருக்கு 3 இடங்களில் வரவேற்பு

திருச்சியில் பிரதமா் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சாலையில் மக்கள் சந்திப்புப் பயணத்தின்போது 3 இடங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளான அதிமுக, தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் மேள, தாளங்கள்... மேலும் பார்க்க

திருச்சி மாநகரில் ஜூலை 29 - ல் மின்தடை

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் (ஜூலை 29) செவ்வாயக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் வெளியிட்டு... மேலும் பார்க்க

திருச்சியிலிருந்து தில்லி சென்றாா் பிரதமா்

திருச்சிக்கு 2 நாள் பயணமாக வந்திருந்த பிரதமா் நரேந்திர மோடி, நிகழ்வுகளை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றாா். இரண்டு ... மேலும் பார்க்க