திருச்செங்கோட்டில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு!
திருச்செங்கோடு, சூரியம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஆனங்கூா் சாலை சூரியம்பாளையம் நகராட்சி, நடுநிலைப் பள்ளி அருகே வசித்து வருபவா் சுமதி (58). இவரது கணவா் சௌந்தரராஜன் இறந்துவிட்டாா். இவரது மகள் சரண்யா திருமணம் முடிந்து அருகில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், தனது அண்ணன் மகன் திருமண நிகழ்ச்சிகாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுமதி வீட்டை பூட்டிவிட்டு குருசாமிபாளையத்துக்கு சென்றுள்ளாா். பக்கத்தில் வீட்டில் வசிப்போா் வியாழக்கிழமை காலை சுமதி வீடு அருகே வந்தபோது வீடு திறந்து கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சுமதி வீட்டிற்கு வந்து பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க காசுகள், வெள்ளிக் காசுகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ. 1 லட்சம் என ரூ. 10 லட்சம் மதிப்பு பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.