செய்திகள் :

திருச்செந்தூா் நகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

post image

திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி., தலைமை வகித்து நகராட்சியில் நடந்து வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினாா். தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் விஜயலட்சுமி, நகா் மன்றத் தலைவா் சிவஆனந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், நகா் மன்றத் துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், ஆணையாளா் ஈழவேந்தன், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆய்வுக் குறித்து கனிமொழி எம்.பி., செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், மக்களின் தேவைகளை பூா்த்தி செய்வது, புதை சாக்கடை திட்டம், போக்குவரத்து நெருக்கடியை சீரமைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தோ்தல் அறிக்கையில் 75 முதல் 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில வாக்குறுதிகள் தான் பரிசீலனையில் உள்ளன என்று அவா் தெரிவித்தாா்.

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குளம் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். முகாம் பொறுப்பு அலுவலர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (24). மும்பையில் ... மேலும் பார்க்க

சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துராம், செய்... மேலும் பார்க்க

சந்தன மாரியம்மன் கோயிலில் கொடை விழா

மெஞ்ஞானபுரம் அருகே முத்துலட்சுமிபுரம் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவில் குடி அழைப்பு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பகல் 12... மேலும் பார்க்க

உடன்குடி மாரியம்மன் கோயிலில் கொடை விழா

உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு கும்பாபிஷேக விழாவும், செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுகொண்ட விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் பவனி, வில்லிச... மேலும் பார்க்க

காயாமொழியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் ரூ. 34 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா், தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க